இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பார்க்கப் போனால்
வெறும் புகழில்
என்ன இருக்கிறது?
புகழ் ஒரு வேசி......
ஏஏய்,வேசியாவது
காசு சம்பாதிப்பாள்.
கிராக்கி வராதபோது
இன்பம் தருவான்.
வெறும் புகழ்
என்ன தரமுடியும்?
காப்பி தாகம்
மனசை வறட்டுது;
புகழை குடிக்க முடியுமா?
பசி
வேட்டை நாயென
குடலைக் குதறுது
புகழ் தீனி ஆகுமா?
கண்டதும் கவரும்
பண்டமும் பகட்டும்
கண்ணில் பட்டால்
ஆசை தூண்டுது
வாங்கி மகிழ் என!
மணிப் பர்ஸ் காலி.
புகழைக் கொண்டு
பணப்பை ரொம்புமா?
வல்லிக்கண்ணன்