இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூழ்நிலைப் பாலையில்
வாழ்க்கை வெயிலில்
சுற்றித் திரியும்
என் கண்களுக்கு
குளுகுளு ஒயஸிஸ்
ஆயின,அன்பே!
உன்னிரு விழிகள்!
அலுவல் அலைகளில்
எற்றுண்டு இடறி,
காகிதக் கடலில்
புரண்டு தவிக்கும்
என் விழிகள்
தங்கி இன்புற
பசுமைத் தீவாய்
உதவும்,பெண்ணே!
உன் ஒளிக்கண்கள்.
1967
அமர வேதனை