பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் தமிழ்

95

உள்ளன. இவற்றைப் பற்றிச் சில செய்திகளை ஈண்டு அறிவது மிகவும் இன்றியமையாதது.

முதலாவதாக, பொதுமக்களுக்கென எழுதப்பெறும் நூல்களின் வளர்ச்சியினைக் காண்போம். தனியார் துறை இதில் பெரும்பணி ஆற்றியுள்ளது. தொடக்க நிலையில் மேற்கொள்ளப்பெற்ற முயற்சியால் வெளிவந்த சில நூல்களைப்பற்றியும் முதன் முதலாகத் தொண்டாற்றிய முதல் நிலைத்தொண்டர்களைப்பற்றியும்மேலே குறிப்பிட்டோம். அங்குக் குறிப்பிட்ட பெரியார்களில் திரு. பெ. ந. அப்புசாமி அவர்களும் பேராசிரியர் ஆர். கே. விசுவநாதன் அவர்களும் இன்னும் தமிழ்த்தாய்க்கு அணிகலன்கள் பூட்டி மகிழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிப் பல்வேறு எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். இவர்களுள் ந. குழந்தைவேலன் (என். கே. வேலன்), பேராசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியார் ஆகியோர்களை முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம். திரு. வேலன் அவர்கள் பல்லாண்டுகளாகத் தமிழுலகுக்கு நன்கு அறிமுக மாணவர்கள். இவர்களுடைய பல்வேறு துறை நூல்கள் பெரும்பாலும் சிறுவர்கட்கும் பொதுமக்கட்கும் அதிகமாகப் பயன்படுபவை. ‘மின்சாரத்தின் கதை’, (தமிழக அரசு பரிசு பெற்றது) ‘அணுவின் கதை’, ‘நிலவின் கதை’ போன்ற பல நூல்கள் படிக்கும் சிறுவர்களின் மனங்களை நன்கு கவரும். பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் இன்று சிறுவர்கட்கும் வளர்ந்தவர்கட்கும் நூல்கள் எழுதியுள்ளார். மொழி பெயர்ப்பு நூல்களில் ‘மானிட உடலைக்’ (1958) குறிப்பிடலாம். ‘அணுவின் ஆக்கம்’ (1958), ‘இல்லறநெறி’ (1964,1976) ‘வாழையடிவாழை’ (1981) இவை வளர்ந்தவர்க்கென எழுதப்பெற்றவை.இவருடைய ‘இளைஞர்வானொலி’ (1961), ‘இளைஞர் தொலைக் காட்சி, (1965), இராக்கெட்டுகள்’ (1964) (தமிழக அரசின் பரிசு பெற்றது) ‘அதிசய மின்னணு’ (1963), ‘நமது உடல்’ (1966) (தமிழக அரசின்