பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இறைவனின் ஆன்ம வேட்மை i51

எனத் தெரிவிக்கின்றார். இதனால் ஈசுவரன் உயிரைத் தனக்கு எனவே வினியோகம் கொண்டுள்ளான் என்ப தைை அறிகின்றோம்.

எம பெருமானை அநுபவிக்கும் ஆழ்வாருக்கு "எப் பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழிதோறும், அப் போதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே.”* என்னும்படி நாள்தோறும் அறிதாகத் தோன்றுமாப் போலே, எம்பெருமானுக்கும் ஆழ்வாருடைய அது வம் நாள்தோறும் அரிதாகவே தோன்றுகின்றது. எனவே அவன், .


'கோளுண்டான் அன்றிவந்து
என்னுயிர் தான் உண்டாள் நாளும்நாள் வந்தென்னை
முற்றவும் தான் உண்டான்'

ஒருநாள் அநுபவித்து, ‘இனி இது நாம் அநுபவித்தது அன்றோ?' என்று கைவாங்கியிராமல் நாள்தோறும் வந்து ஆழ்வாரை அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாக அதுபவித்தான். இங்கே நம்பிள்ளை, "அனுப்பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு" அநுபவித்தானென்கின்ற இது தனக்கு ஏற்றமாம்படி கெளரவியா நின்றான்' என்று அருளிச் செய்திருப்பது சிந்திக்கத் தக்கது. ஆழ்வாருடைய ஆன்மா அணுவளவாக இருப்பினும், அளவு கடந்த பாரிப்புக் கொண்ட எம்பெருமான் அதுபவிக்குமிடத்து அந்த அணு அளவுப் பொருளையும் பெரிதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பது இதன் கருத்தாகும். இத்தனைக்கும் காரணம்,

12. திருவாய் 2.5:4

13. திருவாய் 9.6:8 - -

14 விளாக்குலை கொள்ளல்-குலை குலையாகப்

பறித்து வாய்க்கொள்ளுதல் (ஒரே கவ்ளமாக உண்ணுதல் என்றபடி)