பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி மூன்று |கடற்கரை, தாமோதரனும் லலிதாவும் மணலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிரு.ர்கள். முழு நிலவின் ஒளி படர்ந்திருக்கிறது.1 தாமோ : இந்த இனிமையான தேன் நிலாவிலே இதைக் கந்தர்வலோக மாக்குவற்கு ஒன்றுதான் வேண்டும். லலிதா : என்ன வேண்டும்? தாமே ; அது உங்களுக்குத் தெரியாதா? உங்களுடைய பாட்டுத்தான் அது. தேன் நிலவிலே ஊறுகின்ற அமுதத் துளிகள்தான் அந்தப் பாட்டு. லலிதா (மகிழ்ச்சியோடு) : நான் என்ன அவ்வளவு நன்ருகப் பாடுகிறேன? தாமே ; அதைப்பற்றிப் பேசி என்ன பிரயோஜனம்? பேசத்தான் முடிகிறதா என்ன? லலிதா பாட்டுக்கு ஒரு தனிப்பட்ட சக்தி இருக்கத்தான் செய்கிறது. தாமே : எல்லோருடைய பாட்டுக்கும் அந்த சக்தி இருக்கிறதாக நான் சொல்லமாட்டேன். உங்களு டைய பாட்டுக்கு அந்த மோகன சக்தி நிக்சயமாக உண்டு. இப்பொழுது நீங்கள் ஒரு பாட்டுப்பாடுங்கள் -இந்த உலகமே சொக்கிப் போவதை நான் பார்க்கப் போகிறேன்; பாடுங்கள். லலிதா (மகிழ்ச்சியோடு பாடத் தொடங்குகிருள்) : பல்லவி குழலோசை கேட்குதடி-கண்ணன் குழலே # Sಾ F கேட்குதடி