பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி நான்கு (கமலா இருக்கும் வீட்டில் முன் அறை. கமலா எதிர்பார்த்து நின்றிருக்கிருள். சுப்பிரமணியம் உள்ளே நுழைகிருன். காலே பதினெரு மணி.) சுப்பிர : கமலா...... கமலா : சுவாமி, அடியாள் மிகவும் பாக்கியசாலி. இப்படி இந்த ஆசனத்தில் அமருங்கள். அப்பா இன்று ஊரிலிருந்தால் மிகவும் சந்தோஷப்படுவார். (வணங்கி நிற்கிருள்.: சுப்பிர : எங்கே லக்ஷ்மி ? கமலா : அவள் பள்ளிக்கூடம் சென்று விட்டாள். தாங்கள் வரும்போது இருக்க முடியவில்லையே என்று அவள் வருத்தத்தோடு சென்றிருக்கிருள். சுப்பிர : நீ பாடுவதைக் கேட்டுக் கேட்டு அளவிலா மகிழ்ச்சி யடைந்திருக்கிறேன். உன்னுடைய குரல் என்னே இங்கே இழுத்து வந்துவிட்டது. கமலா : தங்களுடைய பாட்டின் மகிமையாலேயே நான் கடைத்தேறினேன். அவற்றைப் பாடுவதிலேயே பேரின்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. சுப்பிர (மெதுவாக) : நான் பாட்டெழுதவும், நீ அதைப் பாடவும் இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும். கமலா : நீங்கள் எங்கிருந்தாலும் நான் தங்கள் பாட்டுக் களை எப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பேன், சுவாமி.