பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 141 கமலா ஆனால், அவர் எதற்காக இங்கே வந்திருக்கிருர்? லகஷ்மி : அது என்னவோ ? எனக்கென்ன தெரியும் ? இப்பவெல்லாம் உபந்நியாசம் செய்கிற போதும் மறதியாக என்ன்ென்னவோ சீர்திருத்தத்தைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிருராம். கமலா : உலக எண்ணமே அவருக்கு மறந்து போலுைம் போகலாம். லக்ஷமி : அக்கா, அவரை நம் வீட்டிற்கு அழைத்து வந்தால் என்ன ? கமலா : இந்த சமயத்தில் வேண்டாம். அதுவும் அப்பா ஊரில் இல்லாத காலத்தில்...... லகஷ்மி : சாமியார்தானே ? அவர் வந்தால் என்ன ? கமலா : யாராயிருந்தாலும் வேண்டாம். மேலும் அவர் இஷ்டப்படமாட்டார். கோபித்துக்கொண்டாலும் கொள்ளுவார். லகஷ்மி : அக்கா, அவருக்கு உன்னுடைய பாட்டென்ருல் ரொம்ப இஷ்டம், அதைக் கேட்கவே தினமும் அதிகாலையில் இந்த வீதி வழியாகப் போகிருராம். (கமலா பாடத் தொடங்குகிருள். லக்ஷ்மி படுக் கையில் படுத்துப் போர்த்துக் கொள்கிருள்.) கமலா (பாட்டு) : பல்லவி எங்கு நீ யுள்ளாய்-முருகா எங்கு நீ யுள்ளாய் (எங்கு)