பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இளந்துறவி நான் இதுவரை சென்றதேயில்லை. ஆனால், எந்த வீதியில் போனுலும் ஆற்றுக்குப் போய்ச் சேரலாம். நீ சொன்னது போலவே புதிய வீதியிலே இன் றைக்குப் போகலாம். ராம : சுப்ரமணியம், ஒரு விஷயம் சொல்லுகிறேன், கோபித்துக்கொள்ளாதே. இது வேடிக்கையல்ல, முக்கியமான விஷயம். உன்னோடு ஒருநாள் முழுதும் இருந்தேனே'ஒன்றும் வித்யாசம்ே தெரியவில்லையே? சுப்பிர : என்ன வித்தியாசம் ? நாம் இரண்டு பேரும் பால்ய சிநேகிதர்கள். விளையாடுவோம். சண்டை போடுவோம்; பிறகு சேர்ந்து கொள்வோம். இதிலே என்ன வித்தியாசம் ? ராம : நான் அதைச் சொல்லவில்லை. துறவியாகி விட்டாயே மாறுதல் ஒன்றும் காளுேமே, பழைய படிதானே இருக்கிருய் ? சுப்பிர பழையபடி இருக்காமல் பிறகு என்ன மாறுதல் வேண்டுமென்கிருய் ? காஷாயம் போட்டுக்கொண் டிருக்கிறேன் ; அது மாறுதல் இல்லையா? ராம : காஷாயம் எல்லாம் நன்ருகத்தான் இருக்கிறது. சுப்பிர : பின்னே என்ன வேணும் ? பெரிய சுவாமிகள் என்று தடபுடல் செய்ய வேனுமா ? ஆஷாடபூதி போல் நடிக்க வேணுமா ? ராம ; அதில்லை. எனக்கென்னவோ நீ பழைய சுப்பிர மணியமாகத்தான்...... |பாட்டு ஒலி லேசாகக் கேட்கிறது.1 சுப்பிர சரிசரி, வளேத்து வளைத்து ஒரே விஷயத்தைப் பேச வராதே. பால்ய சிநேகளுன உனக்கு வித்யாசம்