பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57



கமலத்தில் தீக்கொழுந்தை வைத்தது. கொட்டு மேளம் முழங்க மேகலையின் கழுத்தில் திருமாறன் மூன்று முடிச்சுகள் இட்டதாகக் கனவு கண்டான் அவன். உச்சி தொட்டு உள்ளங்கால் முடிய நடுக்கம். ஆமாம், இன்றைக்கு இரவு மேகலையைத் திரும்பவும் தனியே சந்தித்துச் தான் முடிவு செய்ய வேண்டும் ‘ என்று தீர்மானித்தான். எண்ணிய விசையுடன், யாரையும் கவனிக்காமல் அங்கிருந்து நகர்ந்தபோது, வாசலில் தன் அன்னையும் சிந்தாமணியும் நிற்பதைக் கண்டான். ஒரு வேளை அதுவும் கனவாக இருந்து தொலைக்கப் போகிற தென்ற ஆத்திரத்தில், கண்களைப் பரீட்சை செய்தான் அது உண்மைக் காட்சிதான் என்பதற்கு அத்தாட்சி கிடைத்தது.


‘தம்பி, உன்னைக் கண்டதுந்தான் என் மனசு நிம்மதிப் பட்டது. சொல்லாமல் கோள்ளாமல் இப்படிப் புறப்பட்டு வந்திடலாமா ? சிந்தாமணி ஆறுதல் சொல்லிச்சி, நீ இங்கேதான் வந்திருக்கவேணும்னு.’’ என்றாள் கோசலை அம்மாள். கண்ணிரின் கறை விழி விளிம்புகளில் இல்லை, தொனியில் இருந்தது.


‘அம்மா மேகலை எனக்கு இல்லையாமே அம்மா ? கல்யாணத்துக்குத் தேதி வச்சு, பத்திரிகைகூட அடிச் சிட்டாங்களே அம்மா ?”


“உன் மனசு உடைஞ்சிடுமேன்னுதான் நமக்கு வந்த கல்யாணப் பத்திரிகையை முன்னாடியே உன் கிட்டே காட்டல்லே ...’ ‘..


சுற்று மதிர் சுவர் ஒரமாக மேகலை நடந்து வாசலுக்கு வருவதை அறிந்தான் மாமல்லன்.


“அத்தை “ என்று விம்மினாள் மேகலை, உள்ளே திருமாறனும் வெளியே அவனுடைய தந்தை யும் எல்லைக் கற்களாக நிற்பதுபோலப் பட்டது மாமல்லனுக்கு. -