பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#00


புரிந்தான். சுய நலம் காட்டாத உள்ள நிறைவு தியாகப் பண்பில் விளைந்திட முடியும். தீமையை விலக்கி நன்மையை செய்து காட்டுவது பிறவிப் பயனாக அமைந் தால் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக விளங்க முடியும்.


மாடிக்குச் சென்றார்கள் மாமல்லனும் குலோத்துங் கனும். தருணம் குறி பார்க்கப்பட்டது. அதற்குள் இளைஞனின் கண்கள் ஒன்றோடொன்று பொருதத் தொடங்கின.


மாடியில் திரைப்படக் காதலர்களின் படங்கள் சில காட்சியளித்தன. முதல் இரவின் இனியக் கனவுக் காட்சிகள் ஏடு விரித்தன. இளவேனில் மாளிகையில் அமர்ந்திருப் பதாகப்பட்டது, தன்னுள் சிரித்துக் கொண்டான். அவன் குலோத்துங்கன் அல்ல :-மாமல்லன் !


‘வருண குலாதித்தன் மட'லின் மூன்றாவது இதழ் புரட்டப்பட்டது.


தேனே மதன திரவியமே ! செங்கமல


மானே அறுராக வல்லியே t’


மேகலையின் மோகன பிம்பம் அணு அணுவாக மறைந்த போது, மாமல்லனிடம் கடிதம் ஒன்றைக்


கொண்டு வந்து நீட்டி அணு அணுவாக எழிற் கோலம் சேர்த்தாள் மேகலை.


அவள் கண் திறந்து இதழ் குவித்தாள். மூக்குத்தி சிரித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. நான்கு சுவர்களுக்கு உள்ளே விழிகளை மேய விட்டான். அவளும் தான். குலோத்துங்கன் இந்நேரம் எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறானோ ? திரும்பியும் அவளைப்