பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வல்லிக்கண்ணன் வேண்டும் என்று ஊக்குவித்து, உறசாகப படுத்துகிறார். அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் அவா வழங்கியுள்ளார். தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும் பகல் வந்தால் பிணங்கி ஓடும்! நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம் பாய்ச்சும் நாள் அன்றோ நம் தமிழர் பொன்னாள்: எல்லாநல் லியல்களையும் தமிழ்ச் சான்றோர்கள் எம் தமிழில் முழக்குகிறார் என்றே ஓங்கிச் சொல் நாளே தமிழ்க்குலத்தார் உவந்துபோற்றும் சுடர்ப்பொன்னாள்? இடர்நீங்கும் நன்னாள் என்பேன்! கல்விதரு கூடங்கள் மற்றும் உள்ள கல்லூரிப் படிப்பெல்லாம் தமிழர்நாட்டுள்