பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ற வல்லிக்கண்ணன் இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ "தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம்,நல்ல கருத்துக்கள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக அமைந்துள்ளது. இது. 'தமிழா, சாதியை மற, தமிழை நினை. மதத்தை மற, தமிழை நினை. கட்சியை மற, தமிழை நினை’ என்று: முழக்கமிட்டுத் தமிழுக்கு மாண்பு தேட முயன்ற நடைப் பயணத்தின் நோக்கங்கள், உதவிய பெருமக்களின் பங்களிப்புகள், நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் இந்தப் பாவை நூல் விவரிக் கிறது. 'கும்பிடும் சாமிக்குக் கொம்புத் தேன் வானமுதம் நம்புசெவி பாயா நடைமுறை ஆகாதோ? நம் தமிழர் ஆட்சிதுறை தாங்கும் அலுவலகம் நம் தமிழ் ஆட்சி நடைமுறை ஆக்காதோ? தெம்புநீதி மன்றஉரை தீந்தமிழ் சொல்லாதோ? செம்பொருட் காவியங்கொள் சங்கத் தமிழ்நஞ்சோ?