பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

ஆகவே, மாணவர்களுக்குக் கடினமான கருத்துக்களையும் கனிபோல சுவைக்குமாறு எளிதாக்கி, இனிதாக்கித் தந்து; மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப செயல்களைத் துவக்கி, நாளுக்கு நாள் வளர்த்து; நிறைந்த பலன்களை விளைத்துத் தருவதே கற்பிக்கும் கலையாக விளங்குகிறது.

அந்தக் கற்பிக்கும் வழியில்தான் வளர்ச்சியும் எழுச்சியும் மிகுந்து, மெருகேறிய முன்னேற்றத்தை வழங்குகிறது என்பதை ஆசிரியர்கள், என்றும் நினைவில் கொண்டு, அற்பிக்க வேண்டும்.