பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

செய்தது. பட்டணம் பார்க்கும் ஆசையெல்லாம் இப்பொழுது அதற்கு இல்லை.

அந்தச் சமயத்திலே பக்கத்திலே பாண்டு வாத்தியம் திடீரென்று முழங்க ஆரம்பித்தது. புதிதாக ஒரு பெரிய டேரா போட்டிருப்பதையும் அது பார்த்து ஆச்சரியமடைந்தது. டேரா உயரமாக இருந்ததால் சத்திரத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அங்கு என்னதான் நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கடக்கிட்டி முடக்கிட்டி புறப்பட்டது.

டேராவுக்கு முன்னால் பாண்டு வாத்தியக்காரர்கள் உற்சாகமாகக் கடலலைகளின் சத்தம் தோற்றுப்போகும்படி தங்கள் வாத்தியங்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கத்தில் எத்தனையோ குதிரைகள், யானைகள், குரங்குகள், நாய்கள் எல்லாம் தயாராக நின்றுகொண்டிருந்தன. சிங்கம், புலி முதலிய விலங்குகளும் கூண்டில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்தன.

அது ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனி என்று கடக்கிட்டி முடக்கிட்டி தெரிந்து கொண்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் மூன்று மணிக்கே முதல் காட்சியைத் தொடங்கினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் ஆவலோடு வந்து கூடிக்கொண்டிருந்தார்கள்.

அத்தனை விலங்குகளும் என்னதான் செய்யப்போகின்றன என்று பார்த்துவிடவேண்டும்