பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கிழவன் தூங்கி எழுவதற்கும், அது வருவதற்கும் சரியாக இருந்தது.

பழைய சோற்றைத் தின்றுவிட்டுக் கிழவனோடு கடக்கிட்டி முடக்கிட்டி ஓய்யாரமாகக் குடிசையை நோக்கி நடக்கலாயிற்று. அதற்கு ஒரே ஆனந்தம். அதனால் அது அடிக்கடி கத்திற்று. அன்று ஏன் அதற்கு அவ்வளவு கொண்டாட்டம் என்று கிழவனுக்கு விளங்கவே இல்லை.