பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
கடக்கிட்டி முடக்கிட்டியும்
காட்டுவிலங்குகளும்

முயல் எப்பொழுதுமே பயந்த இயல்புடையது. அதன் பெரிய காதுகளின் உதவியைக் கொண்டு சின்னச் சத்தத்தையும் கண்டு பிடித்துவிடும். அப்படிச் சத்தம் கேட்டால் உடனே தாவி ஒடிப் புதருக்குள் பதுங்கிக் கொள்ளும்.

இந்தக் கோழை முயல்களையெல்லாம் தோற்கடிக்கச் செய்யும்படியாக அவ்வளவு பெரிய கோழை முயற்குட்டி ஒன்று இருந்தது. சிறிய ஒலியைக் கேட்டாலும் 'விறுக்கு விறுக்கு' என்று நடுங்கும்; தாவித்தாவி ஓடிவிடும்.