பக்கம்:ஆதி அத்தி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆதி அத்தி பிற நாடுகளிலும் அறிந்து கொண்டிருக்கிரு.ர்கள். இது சோழ மரபிற்கே பெருமை தந்திருக்கிறது. (சேவகன் ஒருவன் முன்வந்து வணங்குகிருன்.) கரிகாலன் (சேவகனப் பார்த்து) : சேவகா, என்ன செய்தி? சேவகன் : சோழ வேந்தே. தங்கள் தரிசனத்திற் காக நாட்டியக்காரர் ஒருவர் சமயம் பார்த்து நிற்கிரு.ர். கரிகாலன் : நாட்டியக்காரா? சேவகன் : ஆம், அரசே-அவர் தம்முடைய பெயர் அத்தி என்று தெரிவித்தார். சேர நாட்டிலிருந்து வந்திருக்கிரு.ராம். கரிகாலன் : அப்படியா? அவரை இங்கே வரும்படி சொல். (அமைச்சர் பக்கம் திரும்பிப் பார்த்து) அமைச்சரே, நீங்கள் இந்த நாட்டியக்காரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமைச்சர் : நான் கேள்விப்பட்டதில்லை; இப் பொழுதுதான் அவர் முதல் முறையாக நம் நாட்டுக்கு வருகிருர் போலிருக்கிறது. (அத்தி எதிரில் வந்து நின்று வணங்குகிருன். உடல் வனப்பும் மிடுக்கான தோற்றமும் உடைய இளைஞன் அவன்.) அத்தி : கரிகாற் பெருவளத்து வேந்தே, எனது வணக்கம். நான் சேர நாட்டைச் சேர்ந்தவன்; அத்தி என்பது என் பெயர். நாட்டியக் கலையை ஆர்வத்தோடு தாங்கள் போற்றி வளர்ப்பதை அறிந்து தங்களைக் காண நான் வந்திருக்கிறேன். கரிகாலன் : கலைஞர்கள் எந்த நாட்டிலிருந்து வந் தாலும் அவர்களே ஏற்றுப் பாராட்டுவது இந்த நாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/15&oldid=742401" இலிருந்து மீள்விக்கப்பட்டது