பக்கம்:இரு விலங்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

 சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஆத்தூருக்கு அருகில் வடகுமரை என்ற சிற்றுார் இருக்கிறது. சில நூறு வீடுகளே உள்ள கிராமம் அது. அங்கே திருமால் கோயிலும் சிவன் கோயிலும் வயல்களை அடுத்து அருகருகே உள்ளன. சிவன் கோயிலுக்குள் ஓலைக் குடிசை ஒன்று இருக்கிறது. அதைக் குடிசை என்றும் சொல்லலாம்; பர்ணசாலை என்றும் சொல்ல லாம். இரண்டும் ஒன்றையே குறித்தாலும் உள்ளே உறை பவர்களின் வேறுபாட்டை அவை தனித் தனியே குறிக் கின்றன. உள்ளே இருப்பவர் ஏழையானால் அதைக் குடிசை யென்னலாம். முனிவராக இருந்தால் பர்ணசாலை என்று கூறலாம். அப்படிப் பார்த்தால் இது குடிசை அன்று; பர்ணசாலை. இதனுள்ளே ஒரு முனிபுங்கவர்-சுவாமிகள்-வாழ்கின்றார். அவரை வட குமரைச் சுவாமிகள் என்றும், ஶ்ரீ அப்பண்ண சுவாமிகள் என்றும் வழங்குவார்கள்.
 சுவாமிகள் என்று சொல்வதற்கு அவரிடம் தனி அடை யாளம் ஏதும் இல்லை. கரிய ஒல்வியான திருவுருவம்; இடையில் நாலு முழ வெள்ளைக் க் கதர் வேட்டி; மேலே ஒரு சிறு துண்டு. கிராம வாசிகளோடு சேர்ந்து நின்றிருந்தால் அவரை இனம் கண்டு கொள்ள முடியாது,
 ஆனால் அவருடைய கண்களைக் கண்டால் போதும்; "இந்த மனிதரிடம் ஏதோ இருக்கிறது" என்ற எண்ணம் உண்டாகும். அந்தக் கண்கள் அசாதாரணமான ஒளியை உடையவை. அவரோடு சிறிதே பேசத் தொடங்கினால் அவர் சிறிதும் "பிகு" இல்லாமல் எளிய குழந்தை போலப் பேசுவதைக் காணலாம். பேசிக்கொண்டே இருந்தால், அவர் படித்த நூல்களிலிருந்து பல செய்திகள் வரும், பழகின மனிதர்களைப் பற்றிய பேச்சு வரும், இவை முக்கியம் அல்ல; அநுபவமுள்ளவர்களே சொல்லத் தக்க பல மணி யான வார்த்தைகள் வரும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/5&oldid=1296521" இலிருந்து மீள்விக்கப்பட்டது