பக்கம்:இரு விலங்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

திருக்குறளும், பரிபாடலும், தேவாரமும், திருவாசகமும், பெரிய புராணமும் மேற்கோளாக நின்று துணைபுரிகின்றன.

தடித்த எழுத்துக்கள்

 து அலங்கார மாலையில் 17-ஆவது புத்தகம். இன்னும் இரண்டு புத்தகங்களில் அலங்காரப் பா ட ல்க ளி ன் விளக்கத்தை முடித்து 20-ஆவது புத்தகத்தைக் கந்தரலங் காரம் முழுவதற்கும் உரிய ஆராய்ச்சியாக வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். இதுவரையில் இ ந் த த் தொண்டை நிறைவேற்றிய முருகன் திருவருள், எஞ்சிய மூன்று புத்தகங்களையும் நன்கு நிறைவேற்றி வைக்கும் என்றே எண்ணுகிறேன்.
 வழக்கம்போல் அன்பர் சிரஞ்சீவி அனந்தன் எனக்கு உறு துணையாக இருந்து சுருக்கெழுத்தில் சொற்பொழிவை எடுத்துத் தட்டெழுத்தில் வடித்துத் தந்திருக்கிறார். வேறு பல வகையிலும் அவர் உதவி புரிந்து வருகிறார். என்றும் இளையபிரான் திருவருளால் அவருக்கு எல்லா நலன்களும் மேன்மேலும் பெருக உண்டாக வேண்டுமென்று வாழ்த்து கிறேன்.

"காந்தமலை" கி. வா. ஜகந்நாதன் சென்னை-28 20-3-62.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/18&oldid=1296724" இலிருந்து மீள்விக்கப்பட்டது