பக்கம்:இரு விலங்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு விலங்கு

11


பிரமன் என் பெயரை எழுதினானா?" என்று கோபத் துடன் கேட்கிறார். அவருடைய கோபம் பிரமனைச் சுட்டுகின்ற முறையினால் தெரிகிறது;

பங்கேருகன்

 யாராவது ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வந்தால் அவருடைய சிறப்புகளையே நாம் சொல்வோம். அவரை இழிவாகச் சொல்ல வேண்டுமானால் அவருடைய இழிவான இயல்புகளையே பெருக்கிப்பேசுவோம். 'அவன் இன்ன இழிவான இடத்தில் பிறந்தவன்; இன்ன இழி வான மனிதனுக்குப் பிறந்தவன்தானே?, என்று பேசுவது உலக வழக்கு. அதுபோலவே முறை அறியாது காரியத் தைச் செய்த பிரமனை இங்கே,

பங்கேருகன்

என்று சொல்கிறார். பங்கேருகன் என்பதற்குத் தாமரை யில் உள்ளவன் என்று பொருள். பங்கம்-சேறு தாமரை சேற்றிலே முளைப்பதாலின் பங்கேருகம் என்ற பெயரைப் பெற்றது. இங்கே பிரமனை, "பங்கேருகன்" என்றது, 'சேற்றிலே பிறந்த தாமரையில் இருக்கிறவன் அல்லவா?' என்று இழிவு தொனிக்கும்படி அமைந்தது. சேற்றில் பிறந்த தாமரையில் இரு க் கி ற வ ன் குழம்பிய எண்ணத்துடன் இருப்பது இயல்புதான் என்ற குறிப்பு அந்தப் பெயரில் இருக்கிறது. "அவன் என் பெயரைப் பட்டோலையில் இடுவானா? பிறப்பவர்களுடைய வரிசை யில் சேர்த்துக் கணக்கு எழுதிவிடுவானா?" என்று கேட் கிறார் அருணகிரியார் அப்படி எழுதுவதாக இருந்தால்அவன் ஒழிந்தான் என்ற தைரியத்தோடு பேசுகிறார்.

    பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் பண்டு தளை 
    தன் காலில் இட்டது அறிந்திலனோ;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/33&oldid=1402453" இலிருந்து மீள்விக்கப்பட்டது