பக்கம்:இரு விலங்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

19


அவள் ஏழை. ஆதலின் இளம் குழந்தைக்கே பால் பற்றாமல் துன்புற்றாள். அவள் காதில் இந்தச் செய்தி விழுந்தவுடன் தன்னுடைய கணவனை அழைத்து அவரிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, "நீங்கள் போய்ப் பால் வாங்கி வாருங்கள்’’ என்று சொன்னாள். அந்தப் பாத்திரம் சிறியதாக இருந்தது. இதற்குமேலே கொடுக்கப் போகிறாரா?’ என்ற எண்ணத்தினால் அதைக் கொடுத்து அனுப்பினாள். அவளுடைய கணவன் குறிப் பிட்ட இடத்தைத் தேடி அந்தச் செல்வரைக்கண்டான். அங்கே பலர் பாலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். எத்தனை கேட்டாலும் இல்லை என்னாமல் அந்தச் செல்வர் பாலைக் கொடுத்துக் கொண்டிருந்தார். முன்னே போன வர்கள் கூட்டம் கூட்டமாகப் பாலை வாங்கிக் கொண்டிருந் தார்கள். இவனோ கையில் ஒரு சின்னச் செம்பைக் கொண்டுபோய் இருந்தான். அங்கே நிகழும் நிகழ்ச்சி யைக் கண்டபோது, "அடடா! நம்முடைய மனைவி நம் மிடத்தும் ஒருபெரிய குடத்தைக் கொடுத்து அனுப்பாமல் போனாளே! என்ன பைத்தியக்காரத்தனம்?" என்ற எண்ணம் உண்டாயிற்று, "இந்தச் சிறியசெம்பு நிறையத் தானே வாங்கமுடியும்?" பெரிய அண்டாவைக் கொண்டு வந்திருக்கலாம் போலே இருக்கிறதே!" என்று அந்த மனிதன் எண்ணினான். அது போன்ற ஓர் எண்ணத்தை இந்தப் பாட்டில் அருணகிரியார் வெளியிடுகிறார்.

திருச்செங்கோடு

 லகாலமாகத் திருச்செங்கோட்டுப் பெருமான் பெரு மையைக் காதால் கேட்டு உணர்ந்தவர் அவர். செங் கோடு என்பதற்குச் செங்குத்தான மலை என்று பொருள். கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் இருக்கிறது அது. அதைப்பற்றி ஓரளவு முன்பே தெரிந்து கொண் டிருக்கிரறோம். அருணகிரிநாதப் பெருமான், அந்தத் தலத் தில் எழுந்தருளியிருக்கும் வடிவேற்பெருமானைப் பற்றிப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/41&oldid=1402458" இலிருந்து மீள்விக்கப்பட்டது