பக்கம்:ஆண் சிங்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


போது, பஸ் தியிறிக் கொண்டு ஓடிவிட முடியுமா என்ன?

பஸ் முன்னேற இயலாது உறுமுவதையும், டிரைவரும் பிரயாணிகளும் திகைத்துக் குழம்புவதையும் கவிக் கண்ணால் காணும் கிருஷ்ண பிள்ளைக்குச் சிரிப்பாணி அள்ளிக் கொண்டு வருகிறது. அருவி மாதிரிச் சிதறி உருளுகிறது.

தெருவோடு போகிறவர்கள், விஷயம் புரியாமல், ஆசாமிக்குப் பைத்தியம் போல் இருக்கு! என்று எண் னினால், அதற்குப் பிள்ளை அவர்களா பொறுப்பு?

இருஷ்ண பிள்ளையின் உள்ளம் கங்கையைப் போல் தாவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம்! அங்கே குமிழியிடுகிற எண்ணங்களை, கனவுகளையெல்லாம் இவர் எடுத்துச் சொல்வதில்லை. சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல்தான் மற்றவர்களுக்குக் கிடை யாதே!

வெயில் நல்ல பட்டணத்து வெயில் காரோடும் பெரிய ரோடுகளில் தார் இளகி ஒடும். அங்கங்கே ஒடும் நீர் போல் கானல் ஜாலம் காட்டும். எல்லோர் மீதும் வேர்வை கொட்டும். வெயிலே நிலவென மதிப்பார் போல, ரஸ்தா ஒரத்தில் நடந்து கொண்டிருப்பார் கி. பிள்ளை. அவர் உள்ளம் சொல்லும், ‘ஆகா’ வெயில் எவ்வளவு அழகாக இருக்கிறது! வெயில் வெகு நன்று. அது மிக இனியது’ என்று.

இதை வாய்விட்டுச் சொன்னார் என்றால், எவர் தான் அவரைப் பாராட்டத் தயாராக இருப்பர்? ஒளி மயமாய் மிளிருகின்ற விரி வெளியை, நீலவானை, வெயிலொளி யில் மின்னுகின்ற மரங்களின் பசிய இலைகளை, வண்ண வண்ணப் பூக்களை, பளிச்சிடும் கட்டிடங்கள், கார்கள், மாதர் புடவைகள், அனைத்தையும் விசாலப் பார்வையில் விழுங்கிய கண்கள் உள்ளத்தில் மீட்டிய உவகை கீதம் அது என்பதை எத்தனைபேர் புரிந்து கொள்ளச் சித்தமாக இருப்பார்கள்? வெயில் அழகாக இருக்கிறதாம்! மடையன்! சரியான மடச் சிகாமணி இவன். இந்த வெயிலில் இவன் மூளையும் இளகி நிற் கிறது போலும்! என்று தானே எண்ணுவார்கள்?

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/122&oldid=1072874" இலிருந்து மீள்விக்கப்பட்டது