பக்கம்:இரு விலங்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

இரு விலங்கு

"உள்ளம்கவர் கள்வன்"

என்று பாடினார்.

 வள்ளி நாயகியைத் தடுத்தாட்கொண்ட முருகன் அப் பிராட்டி தன்னை இனனானென்று அறியாதிருந்தும் அவளுக்கு அருள் செய்ய முந்தினான். அவளை யாரும் அறி யாமல் எடுத்துச் சென்று திருத்தணிக்குச் சென்றான். அவளைக் களவிலே மணக்க வேண்டுமேயென்ற கவலை யோடு இருந்தான். உயிர்கள் உய்யவேண்டுமென்ற கவலை இறைவனுக்கு இருக்கிறது. தன் மகன் படித்து முன்னுக்கு வரவேண்டுமே என்ற கவலை தந்தைக்கு இருக்கிறது. ஆனால் அந்தப் பிள்ளைக்கு அவ்வளவு கவலை இருப்பதில்லை .
 வள்ளி நாயகியைத் தன்னிடத்தைச் சார்ந்து வாழும் படி அருள் செய்ய வேண்டுமென்ற கவலை முருகனுக்கு இருந்தது. திருமாலுக்கு மருமகனாக உள்ள அப்பெரு மான் திருமகளாகிய சிவந்த மான் ஈன்ற மகளைக் களவில் எடுத்துக் கொண்டு வரவேண்டு மென்ற கவலையோடு இருந்தவன் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 

கருமால் மருகனச் செம்மான் மகளைக்

களவுகொண்டு

    வரும் ஆகுலவனை.

சேவற் கொடியோன்

 ண்டவன் வெற்றியை உடையவன். வெற்றிக்கு அறிகுறியாக அவன் திருக்கரத்தில் சேவல் கொடியிருக் கிறது. சேவலைக் கையிலே கொண்டவன் என்ற பொருளில், 

சேவற் கைக்கோளனை

என்கிறார் அருணகிரியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/74&oldid=1298534" இலிருந்து மீள்விக்கப்பட்டது