உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சமே நரகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக






அச்சமே நரகம்

மேலாண்மை பொன்னுச்சாமி

மீனாட்சி புத்தக நிலையம்
மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625001.
தொலைபேசி : அலுவலகம் : 2345971, வீடு: 2560517
ஈ - மெயில் : meenakshiputhakam@hotmail.com

முதற் பதிப்பு  : ஏப்ரல் 1994
இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 2004
மீனாட்சி :240
உரிமை பதிவு


விலை: ரூ.35.00


ACHAMAE NARAHAM
By MAELANMAI PONNUCHAMY
Novel
First Edition  : April 1994
Second Edition  : December 2004
Pages  : 176 Pages
Price  : Rs. 35.00
Size  : 18 x 12.5 cms
White Printing
Box Board Binding
விசாலாட்சி பிரிண்டிங் பிரஸ்,
சென்னை-600 001.

MEENAKSHI PUTHAKA NILAYAM

Mayura Complex, 48, Dhanappa Mudali Street, Madurai - 625 001.
☎Off: 2345971, Resi: 2560517
E-mail: meenakshiputhakam@hotmail.com

முன்னுரை

இந்திய மக்களின் எல்லையற்ற உழைப்பும் வியர்வையும் மலைமலையான செல்வமாகத் திரண்டு ஒரு பக்கத்தில் குவிய...வளமையும் வறுமையுமாய் முரண்பட்டுக் கிடக்கிறது நமது பாரத தேசம். இந்தியா ஏழை நாடல்ல. ஏழையர்கள் பெரும்பான்மையான நாடு என்பது அதனால்தான்.

இந்த மூலமுரண்பாடே நம் தேச வாழ்க்கையின் உள்ளும் புறமும் பின்னிக் கிடக்கும் எல்லா முரண்பாடுகளுக்கும் மையக் காரணமாகி விடுகிறது.

தேசம் முழுக்க மக்கள் வறுமையிலும் அவலத்திலும், துன்பத்திலும் சிக்கித் திணறுகிறார்கள் என்ற போதிலும் கிராம மக்களின் சோகமும் துயரமும் எல்லையற்ற கொடூரம்.

அதிலும் கிராமத்துப் பெண்கள் வாழ்க்கையில் சூழ்ந்து நெரிக்கிற அவலமும், கொடுமையும் சொல்லுக்குள் அடங்காத பெரும் சோகம்

சமூகத்தின் அடிமைகளாய் ஆண்கள். அந்த ஆண்களின் அடிமைகளாகப் பெண்கள். அதிலும் கிராமத்து வாழ்வில் உடைந்து சிதறாத நிலப்பிரபுத்துவ ஒழுக்க மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும் பெண்களின் அக வாழ்க்கையில் கொடிய விளைவுகளை நிகழ்த்துகின்றன.

உடைந்து சிதறாத நிலப்பிரபுத்துவ சூழலுக்குள்ளேயே விவசாயத் தொழிலில் நுழைந்த நவீனத்துவம், முதலாளித்துவ சாயலுள்ள சிந்தனைகளை ஒரு சலனம் போல நிகழ்த்துகிறது.

ஆமாம்... கிராமத்து உழைக்கும் பெண்கள் பழைய சமூக உறவுத்தளைகளில் சிக்கித் தவித்தாலும்...அங்கும் புதிய மறுமலர்ச்சிச் சிந்தனை வராமலில்லை. அதன் அடையாளம்தான் ‘பூங்கிளி’. இந்தக் கிராமத்துச் சூழலிலும் மறுமலர்ச்சிச் சிந்தனையின் வாசலாக வசந்தன், ஆலைத் தொழிலாளி.

இந்த நாவலில் வருகிற முனியம்மாவும், சுப்புத் தாயும் என் மனசை வதைக்கிற கிராமத்து நிஜங்கள். பூங்கிளி குருத்தாக வெளிப்படுகிற புதிய நிஜம்.

‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக வந்த இந்த நாவல், வாசகர்களின் பாராட்டுகளைக் குவித்துக் கொண்டது. அதுமட்டுமல்ல, விரிந்து பரந்த பெரிய வாசகர் வட்டத்திற்கும் என்னை அறிமுகப்படுத்தியது.

‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் அவர்களுக்கு எனது நன்றிகள். எனது நூலை தொடர்ந்து வெளியிட்டு வருகிற புகழ்மிக்க ‘மீனாட்சி புத்தக நிலைய’ அதிபர் திரு. செ. செல்லப்பன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

நான் வாழ்கிற கிராமங்களின் உள்ளுறைந்த சோகங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்து எனக்கு ரொம்ப முக்கியம். என்னை ஆக்கவும் செதுக்கவும் பயன்படும்.

நன்றி!

மேலாண்மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்
23-4-94

என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=அச்சமே_நரகம்&oldid=1808147" இலிருந்து மீள்விக்கப்பட்டது