அதிசயப் பெண்/அதிசயப் பெண்

விக்கிமூலம் இலிருந்து
அதிசயப் பெண்

வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியாவதி என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவர் அந்தப் பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். வித்தியாவதி மிகவும் அழகுடையவள். அவளைப்போன்ற அழகுடையவள் உலகத்திலேயே இரண்டு மூன்று நபர்களே இருப்பார்கள்.

அந்த அழகியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று பணக்காரப் பிள்ளைகளும், ராஜகுமாரர்களும் ஆசைப்பட்டார்கள்.

வித்தியாதரரோ சிறந்த அறிவாளி ஒருவனுக்கு அவளை மனம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினார். ஆகையால் யாராவது அவரிடம் வந்து பெண் கேட்டால், “இவளுடைய அழகைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள். இவளுடைய சுபாவத்தை நான் 6 - அதிசயப் பெண்

எடுத்துச் சொன்னால் நீங்கள் இவளை விரும்பமாட்டீர்கள்’’ என்று சொல்வார். தகப்பனாரே இப்படி வெளிப்படை யாகச் சொன்னால் அதைக் கேட்டவர்கள் துணிந்து எப்படிக் கல்யாணம் செய்துகொள்ள முன்வருவார்கள்.

ஒரு நாள் ஒருவன் வந்தான். பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்ததாகச் சொன்னான், வித்தியாதரர் வழக்கம்போல், அவள் சுபாவம் உனக்குப் பிடிக்காதே’ என்றார். “அவள் சுபாவம் என்ன? சொல்லுங்கள்’ என்றான். உடனே அவர், அதை ஏன் அப்பா கேட்கிறாய்? ஒன்றா, இரண்டா? அவளைத் சமையல் செய்யச் சொன்னால் கல்லைப் போட்டுச் சமைப்பாள். நீ அதைப் பொறுத்துக்கொள்வாயா?’’ என்று கேட்டார் வந்தவன் பேசாமல் போய்விட்டான்.

சிலநாள் கழித்து மற்றொருவன் வந்தான் அவனிடம், கல்லைப்போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிவாள்’ என்றார். அவனும், இவள் அதிசயப் பெண்ணாக இருப்பாள் போல் இருக்கிறது; நமக்கு உபயோகப்பட மாட்டாள்? என்று எண்ணிப் போய்விட்டான்.

மறுபடியும் ஒருவன் வந்தான். அவனிடம் முன்னே சொன்ன இரண்டோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார்: -

கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியிலே எறிவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்துகொண்டு வந்து வைப்பாள். அதிசயப் பெண் 7.

வந்தவன் அருண்டு போனான். சே, சே! இவளும் பெண்ணா பேயா? என்று எண்ணிக் கொண்டு போய் விட்டான்.

திரும்பவும் ஒரு புதிய இளைஞன் வந்தான். வித்தியாதரர் வித்தியாவதியின் சுபாவங்களை வரிசையாக அடுக்கினார். இந்த தடவை மற்றொன்றையும் கூட்டிச் சொன்னார், வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள் என்று சேர்த்துச் சொன்னார். பாவம்! அந்த இளைஞன் ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டான்.

பின்னும் ஒருவன் வந்தபோது வித்தியாதரர், “அவள் இரண்டு மாட்டின் மேல்தான் படுத்துத் தூங்குவாள்” என்பதையும் சேர்த்துச் சொன்னர். அவனும் வந்த வழியே போனான்.

பிறகு யாராவது வந்தால், கடகடவென்று இத்தனையும் ஒருமுறை சொல்வார்.

கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்துவிடுவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து வைப்பாள். வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள். இரண்டு மாட்டின்மேல் படுத்துத் தூங்குவாள் என்பதை வந்தவர்களிடம் சொல்லுவார். அவர்கள் வேறு ஏதாவது கேட்டால், அவள் சுபாவம் இது! உனக்குப் பிடிக்குமானால் சொல் என்று சொல்வார். வந்தவர்கள் போய்விடுவார்கள்.

இப்படிப் பல மாதங்கள் கழிந்தன. கடைசியில் அறிவும் அழகும் உடைய ஒரு கட்டிளங்காளை வந்தான். அதிசயப் பெண்

அவன் சுகுமாரன் என்று பெயருடையவன். வித்தியாதரரிடத்தில் பேசிக்கொண் டிருந்தான். வித்தியாவதியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மெல்ல வெளியிட்டான். அவர் வழக்கப் படியே அவள் செய்யும் காரியங்களை அடுக்கினார். ‘இவ் வளவு அறிவாளியான இவர் மகள் ஒன்றும் தெரியாதவளாகவோ, பொல்லாதவளாகவோ இருக்கமாட்டாள். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது’ என்று எண்ணிய இளைஞன், “அவள் என்ன செய்தாலும் சரி; அதனால் நான் வருத்தப்பட மாட்டேன். அவளைக் கல்யாணம் செய்துகொள்ளச் சித்தமாக இருக்கிறேன்” என்றான்.

“யோசித்துச் சொல், அப்பா. பிறகு வருத்தப் படும்படி வைத்துக்கொள்ளக் கூடாது” என்று வித்தியாதரர் சொன்னார்.

“வருத்தம் உண்டாக இடம் இல்லை. என்னை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் பெண்ணைத் தாருங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்” என்றான் அவன்.

வித்தியாதரருக்குச் சுகுமாரனுடைய அழகும் குணமும் பிடித்திருந்தன. வித்தியாவதியை அவனுக்கே மணம் செய்து கொடுத்துவிட்டார்.

வித்தியாவதியும் சுகுமாரனும் மனைவியும் கணவனுமாகக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள். அவள் மிகவும் நன்றாகச் சமைத்தாள். சுகுமாரன் மகா புத்திசாலி. ஆகையால் நாளடைவில், தன் மாமனார் அதிசயப் பெண் 9.

சொன்ன விஷயங்களின் உண்மையைத் தெரிந்து ட கொண்டான்.

ஒரு நாள், நான் கல்லைப் போட்டுச் சமைப்பேன் என்று என் தகப்பனார் சொன்னரே, நீங்கள் என்னே எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?’ என்று வித்தியாவதி தன் கணவனைக் கேட்டாள். .

சுகுமாரன், ‘உப்புக் கல்லைப் போட்டுச் சமைப்பாபய் என்று தெரிந்துகொண்டேன். உப்பில்லாமல் எப்படிச் சமைக்க முடியும்?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான். -

‘சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்துவிடுவது உங்களுக்குச் சம்மதந்தானா?’ என்றாள் வித்தியாவதி.

காய் கறி சோறு எல்லாவற்றையும் படைக்கும் இலைதான் ஆதார வஸ்து. சாப்பிட்டால் அதை எறியாமல் என்ன செய்வது?’ என்று சுகுமாரன் சொன்னான்.

வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் நான் கலந்து வைப்பதை நீங்கள் பார்த்ததுண்டோ?’ என்று அவள் கேட்டாள்.

‘தினமுந்தான் செய்கிறாய். வேகாத இலை வெற்றிலே; வெட்டின காப் அடைக்காயாகிய பாக்கு; வெந்த கல் சுண்ணாம்பு; இந்த மூன்றையும் நீ கலந்து தராவிட டால்தான் எனக்குப் பிடிக்காது’ என்று சுகுமாரன் சந்தோஷத்துடன் சொன்னான். -

“அந்தக் குழம்பைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ என்று வித்தியாவதி அடுத்த கேள்வி கேட்டாள். 10 அதிசயப் பெண்

“அது சந்தனக் குழம்பு என்று எனக்குத் தெரியாதா? வேகாத கட்டை சந்தனக் கட்டை; அதன் குழம்பு சந்தனக் குழம்பு. அதனே என்மேலே ஊற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் உண்டாகும்.”

“இரண்டு மாட்டின்மேல் தூங்குவதைப் பார்த் திருக்கிறீர்களா?’ என்று கடைசிக் கேள்வியைக் கேட்டாள் வித்தியாவதி.

“நான்கூடத்தான் கால்மாடு, தலைமாடு ஆகிய இரண்டு மாட்டின் மேல் துாங்குகிறேன். நீ தூங்குவது அதிசயம் அல்லவே!” என்று சு கு மாரன் சொன்ன போது, வித்தியாவதிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“எங்கள் தகப்பனர் எல்லாரையும் ஏமாற்றிவிட்டார். உங்களை மாத்திரம் ஏமாற்ற முடியவில்லை” என்று அவள் சொல்லிச் சிரித்தாள்.