அந்தமான் கைதி/25
இடம்: வீதி
பாத்திரங்கள்: ஜம்பு, கணபதி ஐயர்.
ஜம்பு : ஓய், ஓய், கணபதி ஐயர் ஏது அதிகாலையிலே?...
கணபதி : ஓ! ராத்திரி ஆத்திலே இல்லையோ?
ஜம்பு : ஏய்யா ஏக ஆர்ப்பாட்டமோ? (சிரிப்பு)
கணபதி : ஆர்ப்பாட்டமா! ராத்திரி முழுக்க ஒரே களேபாரமாப் போச்சின்னா!
ஜம்பு : சகஜந்தானே, நாலாந்தாரமா வந்துருக்கா, எஜமானுடைய அந்தஸ்து எப்படிப்பட்ட தென்று புதுப் பெண்ணுக்குத் தெரியவாண்டாமா? இனிமேல் கொஞ்ச நாளைக்கு அதிகாரமெல்லாம் பலமாய்த்தானிருக்கும்.
கணபதி : ஆமா...! என்ன சொல்றேள். சித்தே புரியும் படியாத்தான் சொல்லுங்களேன்.
ஜம்பு : வேறே ஒண்னுமில்லையா. இனிமேல் எஜமானியம்மா தயவை சம்பாதித்துக் கொண்டால்தான் நாமெல்லாம் காலம் தள்ளமுடியும்; இல்லையோ, ஆபத்துதான்.
கணபதி : எஜமானியம்மா தயவைச் சம்பாதிக்கிறதா! பேஷ் உயிர் பொழச்சா போதும்.
ஜம்பு : ஏய்யா!
கணபதி : எஜமானியம்மா தயவைச் சம்பாதிக்க மொதல்லே பூசாரியோட தயவு வேணும்.
ஜம்பு : என்னையா விஷயம்?
கணபதி : விஷயமா! ராத்திரி படுக்கையறைக்குள்ளே போன எஜமான், பொழச்சது புனர் ஜென்மங்தான். போகச்சே அவர் போன ஜோரும்...அப்பா, அலறி அடிச்சிண்டு வந்தார் பாரும், ஏம்பாடு வெல வெலத்துப்போச்சு.
ஜம்பு : என்னையா சமாச்சாரம்?
கணபதி : சமாச்சாரமா புது எஜமானியம்மாளை, செத்துப் போன பழைய எஜமானியம்மா பிடிச்சிருக்காளாம், பேய்.....!
ஜம்பு : பேயா.....!
கணபதி : ஆமா பேய்தான். பிசாசுன்னும் சொல்லலாம். பூசாரி முனியாண்டியோடதான் வீட்டுக்குள்ளே அடி யெடுத்து வைக்கனும், போங்க. எஜமான் உங்களெ ரொம்ப எதிர்பார்க்கிறார். நான் முனியாண்டியை அழைச்சிண்டு வந்திடுறேன்.
ஜம்பு : (தனக்குள்) பேய் பிடித்திருக்கிறதா உம். கிழவனை ஏமாற்ற இதுவும் ஒரு வழியோ? பார்க்கலாம்.