உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டில் உதடு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


உதட்டில் உதடு

சுரதா

அஜந்தா பதிப்பகம்
கீழ்ப்பாக்கம் :: சென்னை – 10


முதற் பதிப்பு: ஜனவரி ′58.
கவிதைகளின் முழு உரிமை கவிஞருக்கே.
அச்சிட்டது :
ஸ்ரீ பாரதி பிரஸ்,
சூளை, சென்னை.

உள்ளே!
உதட்டில் உதடு
எச்சில் முத்தம்
நான்கு வேளை
இருட்டுக்கு சேலை தந்தாள்
இனிக்கும் பதில்
சம்மதம்
படுக்கை சுகம்
காற்றுக்கு வர்ணம் பூசலாம்
யானே வால் கரும்பு
நாடோடியின் குரல்
வாலிபம் ஏற்பட்டது
அவன் கேட்டது
தீத்தீப்பு லோகம்
பருவம்


விலை 6 அணா

முகவுரை

சுரதா அழைக்கிறார்!

“என்னய்யா, இது ! காவேரிபோல கொதித்தெழாமல், சும்மா தஞ்சாவூர் பொம்மையாய் இருக்கிறயே” என்று தஞ்சாவூர் வாசியோ, அல்லது அதை அடுத்த தெற்குப்புற வாசியோ கூறுவான்.

“என்னையா, இது ! ரேஸிலே கோட்டை விட்டாப்பலே குந்திக்கிட்டிருக்கியே!” என்பான் மதராஸ் மண்ணிலே பிறந்தவன்.

ஒருவனுடைய சலனமற்ற தன்மையை உரை வார்த்தையால் கூறுகிறபொழுது இப்படித்தான் சொல்ல முடியும். ‘இழுத்தல்’ என்ற வார்த்தை ‘இசுத்தல்’ என்று திரிந்து உலாவுவதைப் போலே முன்னையவனும், இன்றைக்குப் பிந்தியவனும் சலனமற்ற தன்மையை எப்படிக் கூறியிருப்பானே, கூறலாமோ—தெரியாது.

வார்த்தையிலே இழுத்துக் கட்டும் எண்ணங்கள் நேர்முகமாக எதிருக்கெதிராக ஏதாவதொரு எழுட்சியை உண்டுபண்ண முடியுமே தவிர, எதிர்கால நீண்ட இலக்கிய வெள்ளத்தில் நீந்தி, என்றைக்கும் எதிரொலிக்க முடியாது.

ஆனால்—

கவிதைச் சிமிழுக்குள் பூட்டி யனுப்புகிற வார்த்தைகள், ஒரு கட்டுக் கோப்புக்குள்ளே என்றைக்கும் நீக்கிப் பறக்கிற ‘இறவாத் தன்மை’யைப் பெற்று விடுகிறது.

அதனால்தான்—

“ஏயா இதுவென் கொல் ! ழனைந் துபொரா
தெழுதோ வியமா யினையே !”

எனப் பகர்ந்த வில்லிப்புத்தூரான் காலக் குறுக்குப் பாய்ச்சலுக்கெல்லாம் ஈடு கொடுத்துவிட்டு, இன்றும் புதுமையாக உலவுகிறான். மதராஸ்காரன் சொன்ன ரேஸ் ஆட்டமும், தஞ்சைக்காரன் மொழிந்த தஞ்சாவூர் பொம்மையும் இன்றைய மனிதனின் மனத்தைச் சொல்லலாம். ஆனால் என்றைய மனிதனின் மனத்தைச் சொல்வதற்கு அவை வலுப்பெறவில்லை.

சொல்ல, கவிதை—வேண்டும், கவிஞன் வேண்டும். தமிழுக்கு வில்லனை—அப்படியொரு பாத்திரத்தை—தந்த ராமாயணத்தை உரை நடையிலே. கம்பன் எழுதி யிருப்பானேயானால் ‘ராவணன்’ என்ற செருக்கான ஒரு பாத்திரம் முழு உருவத்துடன் நமக்குக் கிடைத்திருக்க முடியாது. அவனுக்கு அடுத்து வந்த புலவர்கள், உரைநடையிலே ராவணன் குந்தியிருந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை அரித்துச் சாப்பிட்டு நமக்கு ஒரு மூளி ராவணனைக் கொடுத்துவிட்டுப் போயிருப்பார்கள்.

அது மட்டுமல்ல. பண்டைய நாகரிகங்களின் பட்டயக் கல்லாக, மனித சமுதாய நிழலில் விழுந்த பண்புகளின் பாசறையாகக் கவிதை, சங்கம் முழங்கி வருகிறது.

அழகை உடம்பிலும், அன்பை செஞ்சிலும் சேர்த்து, கன்னியாகுமரியிலே மாம்பழச் சாற்றை எடுத்து, இருக்கும் வெளிச்சத்தை ‘இச்’சென்ற சத்தத்தால் அணைத்து ‘உதட்டில் உதடு’ என்று இளமைக்கு ‘ஆளுகை’தந்து ஆர்ப்பரிக்கிறார் கவிஞர் சுரதா.

வில்லிப்புத்துாரானின் நிழல்கீற்றாக இருந்து கவிஞர் சுரதா, உதட்டிலே உதடு சேர்ப்பதால், எச்சில் முத்தம் கொடுப்பதாலேயே இருட்டுக்குச் சேலை தருவது இனிப்பாய் இனிக்கிறது. அவர் உரை நடையிலே இருட்டுக்குச் சேலை தந்திருந்தால், அது தரும் சத்தம் சுவைச் சத்தாக இருக்காது. காமன் களிநடனம் புரியும் பிரகிருதி வாதமாகத்தான் இருக்கிருக்க முடியும்.

காலக் காவேரியின் சுழிப்பு எல்லைகளைப் பந்தமாக வைத்துச் சுழற்றி, நீரும் நெருப்பும் கொள்ளாத கவிதை ஏட்டிலே பூட்டியிருக்கும் சுரதா, எழுத்தாளனைப் போல ‘வாழுங் காலத்து’ப் புழுவல்ல. எதிரிக்குச் சதிராடி ஏற்றம் புரியும் அவர் ‘எக்காலத்தும்’ வாழும் உரிமை பெற்றவராகி விடுகிறார் இக்கவிதைத் தொகுப்பின் மூலம்.

கவிஞர் சுரதாவால், கலாவாணி—

புலமைக்கு அழைப்புத் தத்தாள்—புரட்சி
புதுமைக்குப் பட்டம் தந்தாள்.


சென்னை,
—1—1953.


வாசவன்.


உள்ளடக்கம்

  1. உதட்டில் உதடு/001
  2. உதட்டில் உதடு/002
  3. உதட்டில் உதடு/003
  4. உதட்டில் உதடு/004
  5. உதட்டில் உதடு/005
  6. உதட்டில் உதடு/006
  7. உதட்டில் உதடு/007
  8. உதட்டில் உதடு/008
  9. உதட்டில் உதடு/009
  10. உதட்டில் உதடு/010
  11. உதட்டில் உதடு/011
  12. உதட்டில் உதடு/012
  13. உதட்டில் உதடு/013
  14. உதட்டில் உதடு/014
  15. உதட்டில் உதடு/015
"https://ta.wikisource.org/w/index.php?title=உதட்டில்_உதடு&oldid=1879469" இலிருந்து மீள்விக்கப்பட்டது