உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

விக்கிமூலம் இலிருந்து
    உய்யக்கொண்டார் அருளிச்தெய்தது

       இருவிகற்ப நேரிசை வெண்பா

அன்ன வயற்புதுவை ஆண்டாள் *அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை *பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை*
பாடி அருளவல்ல பல்வளையாய்* நாடிநீ 
வேங்கடவற்கு என்னை விதிஎன்ற இம்மாற்றம்*
நாங்கடவா வண்ணமே நல்கு.