உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கஞ்சன்

விக்கிமூலம் இலிருந்து

45. கஞ்சன்

செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான்.

-லா புரூயர்
உலோபியிடம் எது உண்டு? எது இல்லை? அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா
-பப்ளியஸ் ஸைரஸ்

உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான்.

-பென்

உயர்ந்த நன்மைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. பெரிய தீமைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. இதை உணர்ந்துவிட்டால் பணஆசை என்னும் நோய் எளிதில் நிவர்த்தியாய்விடும்.

-கோல்ட்டன்

திருடரில் திருடன் இங்கே உளன், அவன் தன்னையே கொள்ளையிட்டவன்.

-உலோபியின் கல்லறை எழுத்து

உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார்.

-லா புரூயர்

உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர்.

- லெஸ் ஜெனஸ்கி

சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும்.

-புல்லர்

★ ★ ★