எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962
Appearance
எதிர்க்கட்சித் தலைவர்
பேரறிஞர் அண்ணாவின்
சட்டமன்ற உரைகள்
1957 – 1962
பூம்புகார் பதிப்பகம்
127 (ப. எண். 63), பிரகாசம் சாலை (பிராட்வே)
சென்னை - 600 108.
தொலைபேசி : 044 - 25267543
விலை ரூ. 350/-
பூம்புகார் வெளியீட்டு எண் | : | 950 |
முதற் பதிப்பு | : | ஏப்ரல், 2010 |
வடிவமைப்பு உரிமை | : | பூம்புகார் பதிப்பகம் |
O. No. | : | 02900832 |
P.C. No. | : | 9819HH11 |
அச்சிட்டவர்கள் ஈகிள் பிரஸ், சென்னை - 600 013
பதிப்புரை
- அண்ணா!
- தமிழ்த்தாயின் காலக்கொடை.
- அண்ணா ஓர் அரசியல்வாதி.
- அண்ணா ஓர் சிறுகதை ஆசிரியர்.
- அண்ணா ஓர் புதின ஆசிரியர்.
- அண்ணா ஓர் நாடக ஆசிரியர்.
- அண்ணா ஓர் நாடகப் பயிற்று ஆசிரியர்.
- அண்ணா ஓர் பத்திரிகையாளர்.
- அண்ணா ஓர் ஓவியர்.
- அண்ணா ஓர் கவிஞர்.
- அண்ணா ஓர் தலைசிறந்த சொற்பொழிவாளர்.
- அண்ணா ஓர் எழுத்தாளர்.
- அண்ணா ஓர் இசை பற்றாளர்,
- அண்ணா ஓர் பொதுநலத் தொண்டர்.
- அண்ணா ஓர் தலைசிறந்த நிர்வாகி.
- இதற்கெல்லாம் மேலாக அண்ணா ஓர் மனித நேயமிக்க மாமனிதர்.
- அரசியல் நேர்மை, தூய்மை, ஒழுக்கம், கழகத்தையே குடும்பமாகக்கொண்ட பாசம், மாற்றாரை மதித்துப் பாராட்டும் பண்பு, உடன்பிறப்புக்களை அரவணைத்துச் சென்ற பாங்கு, தலைவனாக இல்லாமல் தொண்டர்களின் அண்ணனாக விளங்கிய பாசப் பிணைப்பு, மற்றவர் துயர் கண்டு துடித்து, ஆறுதல் அளித்த பெருமனம், பொது வாழ்வில் ஒளிவு மறைவு இன்றி வாழ்ந்தமை, எளிமை, பதவி வந்த பிறகும் அடக்கத்துடன் வாழ்ந்த பெருங்குணம். இப்படி எல்லா வகையிலும் அண்ணா எப்படி உயர் குணங்களின் மொத்த உருவமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதற்கான சரித்திரச் சான்றுகள். இப்படிப்பட்ட உயர் குணங்கள் உள்ளவரை ஆன்மீகவாதி ‘கடவுள்’ என்பார். மணி பிரவாள நடையில் ‘மஹாத்மா’ என்பார். அண்ணா அவர்கள் ‘உத்தமர்’ என்பார். நாம் அண்ணா என்போம்.
- வகை அறியாதவர் அல்ல பாமரர்! காலம் வரட்டும்
- என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்.
- அறிவற்றவர்கள் அல்ல மக்கள்! ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள கற்றவர்கள்.
- பிடி சாம்பலாகிப் போனவர்கள் அல்ல அந்த மக்கள்!
- நீறு பூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!!
- ‘ஐந்து கால் பசு’ - திராவிடநாடு.
16.10.1960
- பேரறிஞர் அண்ணா அன்று அறுபதுகளில் எழுதிய, பேசிய பேச்சுக்கள் இன்றைய இரண்டாயிரத்து ஒன்பதுகளிலும் பொருந்தும். மக்கள் அன்றும் பொறுமைசாலிகள். இன்றும் பொறுமைசாலிகள். அன்றைய மக்கள் பொறுமையுடன் வாழ்ந்து 1967ல் புதிய திராவிட யுகத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்றைய இளைஞர்கள் இனிவரும் காலங்களில் புதிய வார்ப்புகளாய் பரிணாமித்து எழுச்சி கொண்டு எழுவார்கள். வங்கக் கடலோரம் கண் துய்யும்
- (உறங்கும்) அண்ணாவைத் தொட்டு எழுப்பி மண் துடைத்து முகத்தில் முத்தமிடும் காலம் வெகுதூரமில்லை அண்ணா என புதிய அண்ணா யுகமாக மாற்ற இருக்கிறார்கள். காலங்கள் கனிய காத்திருப்போம்.
- இப்படிப்பட்ட ஒரு தலைவனை, நெஞ்சுடை மனிதனை, நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ‘அண்ணாவை’ இன்றைய தலைமுறை, அண்ணாவை அறியாத தலைமுறை, அண்ணாவை படமாக மட்டும் கண்ட தலைமுறை, அண்ணாவின் பாடத்தை அறிய முடியாத தலைமுறை. இதை தெரிந்து கொண்டு இன்றைய தமிழக இளையதலை முறை தெரிந்து கொள்ளவேண்டும். அவர் காட்டிய வழியில் தன் பயணத்தை தொடர வேண்டும். அவர்கள் தலைசிறந்து அண்ணாவைப் போல் வாழ்ந்து காட்டவேண்டும். அண்ணா நீ மட்டும் அண்ணா அல்ல தமிழகத்தில் லட்சக்கணக்கான அண்ணாக்கள் உருவாகி இருக்கிறோம். இளைஞர் பட்டறையில் இளைய அண்ணாவாக செதுக்கப் பட்டிருக்கிறோம். என்று சொல்லும் நிலை கூடிய விரைவில் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 35 ஆண்டுகளாக பேரறிஞர் அண்ணாவின் நூல்களை குறைந்த விலையில் எல்லோரும் வாங்கி படிக்கும் வகையில் வெளியிட்டு வருகின்றோம். செம்பதிப்புகளாக அண்ணாவின் நூல்கள் 15 பதிப்புகள் வெளியிட்டுள்ளோம்.
- பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தக் கால கட்டத்தில், அண்ணா அவர்கள் 1957 இலிருந்து 1962ஆம் ஆண்டு முடிய 5 ஆண்டுகள் தமிழக சட்டசபை எதிர்க் கட்சி தலைவராகப் பணிசெய்த காலத்தில் அவர்கள் சட்டசபையில் ஆற்றிய உரைகள் முழுவதையும் காலவரிசைப்படி தொகுத்து, பெரும் தொகுதியாக வெளியிடுவதில் பூரிப்படைகிறோம்.
- ஒவ்வொரு இளைஞனின் பேச்சிலும், எழுத்திலும், மூச்சிலும் அண்ணா வாழ வேண்டும். தமிழக இளைய சமுதாயம் அண்ணா சமுதாயமாக மாற வேண்டும் என்ற உயர்ந்த நிலைப்பாடு கொண்டு பூம்புகார் பதிப்பகம், அண்ணா அவர்கள் எழுதிய, பேசிய, அண்ணா சுவடுகள் அனைத்தும் வரலாற்றுச் சான்றாக உருவாக்கி வருகிறோம். எங்களது உன்னத முயற்சிக்கு வாசகர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்று நெஞ்சார நம்புகிறோம். வாழ்த்துகிறோம், தலை வணங்குகிறோம்.
பூம்புகார் பதிப்பகத்தார்.
பொருளடக்கம்