கனிச்சாறு 3/108
தோற்றம்
104
ஆகுமோ உலகு, அவள்
அழிவிலாப் புகழ்க்கே?
மானமும் உயிரும் வாழ்வும் கருதி
வானமும் நிலமும் நீரும் கடந்து
கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து
தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட
ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும்
5
மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள்
ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக்
காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை -
தன்னையும் இழந்து தமரையும் இழந்த
அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி -
10
தானுவென் பெயரினள் தன்னினம் அழித்த
வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம்
நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு
ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த
ஈக மன்றோ ஈகம்!
15
ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே?
-1992