உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/093

விக்கிமூலம் இலிருந்து


89

நெறி காணீரே !

கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த
படிவத்தைக் ‘கடவுள்’ என்றே
நல்லாவின் பாலாலும் நெய்யாலும்
வழிபாடு நாளும் செய்தே
எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்!
ஆனாலும் எண்ணற் றோரைச்
சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்;
தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே!

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/093&oldid=1839535" இலிருந்து மீள்விக்கப்பட்டது