உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/128

விக்கிமூலம் இலிருந்து

125

மூடர்கள் வாழ்கின்ற காலமிது!


மூடர்கள் வாழ்கின்ற காலமிது! - தம்பி
முழுவிழிப் பாயிரு வாழ்க்கையிலே! - பெருங்
கேடர்கள் மேன்மேலும் ஏறுகின்றார்! - கொடுங்
கீழ்மையை உயர்வென்று கூறுகின்றார்!

தீமைகள் நல்லவை போலிருக்கும்! - பெருந்
திருடர்கள் கையிலும் நூலிருக்கும்! - வெறும்
ஊமையர் போல உலாவருவார்! - பல
ஊறுகள் செய்து துயர்தருவார்!

ஆரவா ரங்கள் பலகோடி! - வெறும்
ஆர்ப்புரை வீண்செயல் ஊர்முழுதும்! - பகல்
நேரம் இரவென்று பார்ப்பதில்லை! - உரை
நேர்மையில்லை; செயல் கூர்மையில்லை!

இப்படி அப்படிப் பொருள்குவிப்பார்! - அதற்
கிழிவுகள் தாழ்வுகள் பார்ப்பதில்லை! - பல
செப்படி வேலைகள் செய்திடுவார்! - அவை
சிறப்பெனப் பகட்டாய்ப் பெயரிடுவார்!

-1982

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/128&oldid=1851535" இலிருந்து மீள்விக்கப்பட்டது