உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/129

விக்கிமூலம் இலிருந்து

126

எவர்க்கும் பயனாய் இரு!


உன்னால் உலகம்
பெறுவதொன் றுண்டாம்!
உணர்வாய் என்றும்
தம்பி! - உனக்கு
முன்னால் பிறந்தோர்
இறந்தோர் பலபேர்!
முகவரி இல்லை, தம்பி!

பிறந்தோர் எல்லாம்
சிறந்தோர் ஆகார்!
பெரும்பயன் உடையது
பிறவி! - உலகில்
இறந்தோர் தம்மில்
இருப்போர் பலபேர்!
எவர்க்கும் பயனாய் இருப்பாய்!

-1983

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/129&oldid=1851536" இலிருந்து மீள்விக்கப்பட்டது