கனிச்சாறு 5/129
தோற்றம்
126
எவர்க்கும் பயனாய் இரு!
உன்னால் உலகம்
பெறுவதொன் றுண்டாம்!
உணர்வாய் என்றும்
தம்பி! - உனக்கு
முன்னால் பிறந்தோர்
இறந்தோர் பலபேர்!
முகவரி இல்லை, தம்பி!
பிறந்தோர் எல்லாம்
சிறந்தோர் ஆகார்!
பெரும்பயன் உடையது
பிறவி! - உலகில்
இறந்தோர் தம்மில்
இருப்போர் பலபேர்!
எவர்க்கும் பயனாய் இருப்பாய்!
-1983