கனிச்சாறு 7/078
தோற்றம்
74
பன்னாடைப் புலவர்!
இலக்கணத்துப் புலியென்பார்; இலக்கியத்துத்
தூணென்பார்; இறுமாப் புற்றுத்
துலக்கமிலா வெற்றறிவால் பிறர்தம்முன்
துகளென்பார்; தொண்டு பேணார்!
விலக்கவிலாச் சூழ்நிலையால் ஒரோவொருகால்
வினைமுடிப்பின் வியப்பார் தம்மை!
கலக்கலுறும் பன்னாடைப் புலவரிவர்;
உண்மையர்க்குக் காற்கீழ்ப் புல்லே!
-1966