உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/144

விக்கிமூலம் இலிருந்து

139

மரத் தமிழன்!


பார்ப்பான் ஒருவன்; பழிவடவன்
மற்றொருவன்;
போர்ப்பண் இசைத்துப் புறம்நிற்க,
இங்கு நீ
புத்தரிசி தெள்ளிப் புதுப்பால்
உலையேற்றிப்
புத்துருக்கு நெய்கலந்து, பொங்கியுண்பாய்
செந்தமிழா!
பொங்கல் நறுஞ்சுவையும், புத்துருக்கு
நெய்ச்சுவையும்
தங்குநின் வல்லடிமை தன்சுவைக்கே
ஈடாமோ?
ஏடா! தமிழனே! என்னிதுகாண்
நின்பெருமை
மாடாநீ? இல்லை; மரம்!

-1966

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/144&oldid=1858205" இலிருந்து மீள்விக்கப்பட்டது