கனிச்சாறு 7/144
தோற்றம்
139
மரத் தமிழன்!
பார்ப்பான் ஒருவன்; பழிவடவன்
மற்றொருவன்;
போர்ப்பண் இசைத்துப் புறம்நிற்க,
இங்கு நீ
புத்தரிசி தெள்ளிப் புதுப்பால்
உலையேற்றிப்
புத்துருக்கு நெய்கலந்து, பொங்கியுண்பாய்
செந்தமிழா!
பொங்கல் நறுஞ்சுவையும், புத்துருக்கு
நெய்ச்சுவையும்
தங்குநின் வல்லடிமை தன்சுவைக்கே
ஈடாமோ?
ஏடா! தமிழனே! என்னிதுகாண்
நின்பெருமை
மாடாநீ? இல்லை; மரம்!
-1966