குடும்பப் பழமொழிகள்/குழந்தைகள்

விக்கிமூலம் இலிருந்து

குழந்தைகள்

தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை. - துருக்கி

மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள். - இந்தியா

உன் மகன் நல்லவனானால், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனானால், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்? -( ,, )

இருண்ட வீட்டின் ஒளி-மகன். குழந்தையின் ஓட்டம் தாய்வரைக்கும். -( ,, )

பதினாறு வயது வரை மகன், அதற்கு மேல் தோழன். -( ,, )

குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு. -( ,, )

பிரியமுள்ள தந்தையரும் தாயாருமே உண்டு, பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை. -சீனா

பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு வருகிறாள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிறான். -( ,, )

வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை.

-( ,, )
குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்; செல்வமில்லாது குழந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன்.
-( ,, )

உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள். -( ,, )

விளையும் பயிர் முளையில் தெரியும். - தமிழ்நாடு

ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைத் தட்டி வளர்க்க.

-( ,, )

ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி. - தமிழ் நாடு

[ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.]

உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும். -சீனா

ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை. -( , , )

(குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.)

கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
-( , , )
பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும்.
-அரேபியா

என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவ னுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.

-( , , )

மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும். -ஆர்மீனியா

உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை. -பாமா

[நம்பியிருத்தல் வீண்.]

தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை .

- கால்மிக்
குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை.
-குர்திஸ்தானம்
வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும்.
-( , , )
இளமையிலே குழந்தைகள் நம் கைகளுக்கு வலியளிக்கும், முதுமையிலே மனத்திற்கு வேதனையளிக்கும்.
-ஐரோப்பிய நாடோடிகள்
வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும்.
- ஆப்கானிஸ்தானம்

நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி. -( , , )

தந்தை அழ நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும். -ஜெர்மனி

குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான், குழந்தைகளில்லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான். -( , , )

தாய் தன் குழந்தையைத் தழுவினால், அநாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார்.

- போலந்து

குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள் ; கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள். -( , , )

[முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.]

அதிகக் குழந்தைகள் இருந்தால், வீட்டுக் கூரை பிய்ந்து போய்விடாது. -பெல்ஜியம்

ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான். - இங்கிலாந்து

வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன். -அயர்லந்து

குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண்.

-அயர்லந்து

சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர்.

-ஸ்காட்லந்து

[குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.]

கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா. -( , , )

குழந்தை தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது. - வேல்ஸ்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

- தமிழ் நாடு

உன் குழந்தைகள் தீயோரா யிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை. -பல்கேரியா

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை. -டென்மார்க்

அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.

- எஸ்டோனியா

பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும். -( , , )

வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது. -( , , )

குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை.

-( , , )

குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும். -( , , )

பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும்.
-( , , )

மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும். - எஸ்டோனியா

பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற்பனைக்குரிய பொருள்கள். -எஸ்டோயா

குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவுவதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது.

-பின்ந்து

மூடன் தன் குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன் தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ்வான். -( , , )

ஒற்றைக் குழந்தை கடவுளின் தண்டனை. -ஹங்கேரி

ஆந்தையும் தன் மகனை இராஜாளி என்றே கருதுகின்து.
-( , , )

தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது. -இதாலி

குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது. -( , , )

அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்றாம் மாதம் குழந்தையை அடைகிறார்கள். -லத்தின்

அதிருஷ்டமுள்ளவனுக்கு முதற் குழந்தை பெண்ணாயிருக்கும். -போர்ச்சுக்கல்

மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளைவிட அருமையானவை. -ரஷ்யா

நீ தகப்பனாகாமலே வாழ்ந்தால், நீ மனிதனாக இல்லாமலே மரிப்பாய். -( , , )

பெண்பிள்ளை கலியாணப் பருவமடையும் பொழுதுதான் பிறந்தவளாகிறாள். -( , , )

குழந்தைகளை இதயத்தால் நேசிக்கவும்; ஆனால் கைகளால் பயிற்சி அளிக்கவும். -ரஷ்யா

விவாகமான பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரைப் போலத்தான். -( , , )

குழந்தையின் கையும் பன்றித் தொட்டியும் நிறைந்தேயிருக்க வேண்டும். - -சுவிட்சர்லந்து

உலகிலே ஒரு குழந்தையை விட்டுச் செல்பவன் நித்தியமாக வாழ்கிறான். -ஆப்பிரிகா

முதற் குழந்தை தந்தைக்குத் தோழன். -( , , )

குழந்தைகள் தெய்வத்தோடு பேசுகின்றன. -( , , )

கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று.
-( , , )

பெரிய நகருக்குச் சென்றிராத குழந்தை தன் தாய்தான் தலை சிறந்த சமையற்காரி என்று சொல்லும். -( , , )

முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பணம். -( , , )

குழந்தை, ஒட்டகக்கழுத்து மாதிரி, எங்கு வேண்டு மானாலும் நுழையும். -( , , )

குழந்தைகளில்லாத எலி ஆற்றோரம் வீடு கட்டிக்கொள்ளும்.
-( , , )

மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும். -( , , )

குழந்தைகளே ஏழைகளின் செல்வங்கள். - இங்கிலாந்து

குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை, நாவுகள் நீளமானவை. -( , , )

புறாக்கள் கடலைகளைக் கொத்துவது போல், குழந்தைகள் வார்த்தைகளைக் கொத்தி யெடுத்துக் கொள்ளும்.
குழந்தைகள் இளமையில் தாயிடம் பால் குடிக்கின்றன, முதுமையில் தந்தையிடம் (அறிவுப்) பால் குடிக்கின்றன. -இங்கிலாந்து

குழந்தை யில்லாதவனுக்கு அன்பு என்ன என்று தெரியாது. -( , , )

குழந்தையைக் கொண்டாடினால், தாயின் அன்பைப் பெறலாம். -( , , )

இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட, ஒரு கலப்பையால் உழுவது மேல். -( , , )

குழந்தைக்கு முதற்பாடம் பணிவு. -( , , )

தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும். -இங்கிலாந்து

நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் - கற்றுக் கொள்ளும். -( , , )

குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை.

-( , , )

தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல். -( , , )

குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும். -( , , )

பகுத்தறிவு உறங்கும் காலம் குழந்தைப் பருவம். - -ரூஸோ

செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும்.

- டென்மார்க்

குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர்.

-( , , )

அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள். - ஜெர்மனி

பெற்றோர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும். -( , , )

குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம். -ஜெர்மனி

குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை. -ரஷ்யா

குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும். -துருக்கி