சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

விக்கிமூலம் இலிருந்து

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

சிந்தனைச் சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் இறந்து விட்டார்; இலட்சியமே மூச்சாகக் கொண்டிருந்த வீரர் மறைந்துவிட்டார். இந்தியா உப கண்டத்தின் முதல் பொது உடைமைவாதி காலமானார், மூன்றவது சர்வதேச அபேதவாத அங்கத்தினர் மூவர்; இந்தியாவில், அவர்களில் ஒருவர் இவர். அப்படி ஒருவர் இருந்தாரா?. என்று கேட்கும், "கதர் ஜுப்பாக்களும்," "காரல் மார்க்ஸ் படிப்போரும்" ஏராளம். சோவியத்திலே பொது உடைமை ஆட்சி ஸ்திரமாவதற்கு முன்னாலேயே, இங்கு சென்னையிலே. கடலோரத்தில், மயிலையில் ஒரு புரட்சி வீரர் உலவிக்கொண்டிருந்தார். உலகிலே காணப்படும் கொடுமைகளைக் கண்டு, மனதிலே கோபம் அலைஅலையாகக் கிளம்ப. அதனால் தூண்டப்பட்டு, யாரும் அதுவரையில் கேட்டறியாத கொள்கையை, பொது உடைமைத் தத்துவத்தைப் புரட்சிக்கனலுடன் கலந்து அளித்து வந்தவரே, தோழர் மா. சிங்காரவேலர் என்பதை, அவர்கள் அறியார்கள். தேசியத் தொழிலாளர் இயக்கங்களிலே அவர் பிரபலமாக இருந்த சிலபல வருஷங்களிலே கூட அவருக்கு உரிய ஸ்தானம் அவருக்கு அளிக்கப்படவில்லை; அவருடைய அறிவும் ஆற்றலும் அளவிடப்படவில்லை வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில், புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்-மறக்கும்படிச் செய்யப்பட்டனர்.

அவருடைய திறமை, அறிவு, ஆற்றல், தியாக புத்தி ஆகியவைகளை அளவாகக் கொண்டு, மதிப்பிட வேண்டுமானால், தோழர் மா.சிங்காரவேலருக்கு லெனின், டிராட்ஸ்கி, சக்லத்வாலா போன்றவர் வரிசையிலே இடந்தர வேண்டும். ஆனால் கந்த புராணம், காந்தி புராணம் படிக்கும் இருவகையினைரையும் போற்றிப் புகழ்ந்த மக்கள், இந்த ஓப்பற்ற புரட்சி வீரனை சாமான்யமாகக் கருதினர். நாளாவட்டத்திலே, சில இலட்சியவாதிகளுக்குத் தவிர, மற்றவர்களுக்கு அவருடைய பெயரும் மறந்து விட்டது என்று கூறிவிடலாம். தோழர் ம. சிங்கார வேலரே, ஏகாதிபத்தியத்தால் தாக்கப்பட்ட முதல் வீரர்— ஆனால் முப்புரி இல்லாத காரணத்தால் மங்கினார். அவருடைய பெருமைப் பாக்கள், படத்திறப்பு விழாக்கள், இல்லை! இராது!. அவர்,மா.சிங்காரவேலுச் செட்டியார். பரதவர் குலம்.(மீன் பிடிப்போர்) நெய்தல் நிலநாயகன்; சிங்காரவேல் சர்மாவாக இருந்திருந்தால், அவருடைய சிலையை மாஸ்கோவிலே நிறுவ வேண்டும் என்று மயிலை கூறும்.

மா. சிங்காரவேர் மறைந்தார் என்ற போதிலும். எதிர்பாராத திடுக்கிடக்கூடிய விதத்திலே நேரிட்ட மரணமல்ல. மரணத்தின்போது அவர் தம்முடைய உழைப்பு வீண் போயிற்றே என்ற சந்தேகம் கொண்டு சஞ்சலமடைத்திருக்கவும் மாட்டார். ஏனெனில் 11-2-46-ல் அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 84. அவருடைய இரண்டு அடிப்படை இலட்சியங்களாகிய சுயமரியாதை, சமதர்மம் என்பவை, ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்ட பிறகே அவரின் கண்கள் மூடின. சுயமரியாதையும் சமதர்மமும் வேறு வேறு கட்சிகளராக இருப்பானேன். அது முறையல்லவே. படை பலமே சிதறுமோ என்ற கவலை மட்டும் அவருக்கு இருந்தது என்று கூறலாம். அதுவன்றி, அவருடைய பெயர் மங்கியது பற்றி நாம் மனம் வருந்துகிறேமேயன்றி அவர் அது பற்றி எண்ணியிருப்பார் என்றோ ஏங்கி இருப்பார் என்றோ எண்ணவில்லை. அந்த அஞ்சா நெஞ்சனுக்கு 'பூர்ஷுவா' உலகில் மதிப்புக் கிடைக்காது; கிடைக்கவில்லை-கிடைக்காததே அவருடைய மாத்துக் குறையவே இல்லை என்பதற்குச் சிறந்த அடையாளமுங்கூட.

இந்திய உபகண்டம், ஏகாதிபத்திய இரும்புப் பிடியிலே சிக்கியது கண்டு, எழுச்சி பெற்று எதிர்த்த முன்னணி வீரர்களில், மா. சிங்காரவேலர் முதல் வீரர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரிடையாகக் கிளம்பிய சிப்பாய்க் கலகம் 1857-ல் கடந்தது. சிறுவன் சிங்காரவேலவனுக்கு, அந்த கலகம் காலத்துச் சம்பவங்களையே, வீட்டாரும் ஊராகும் கூறியிருப்பார்கள், பொழுதுபோக்குக்கோ, மிரட்டவோ, எக்காரணத்துக்காவோ! கம்பெனிக்காரனைச் சிப்பாய்கள் எதிர்த்தனர், எதிர்த்தவர்களை வெள்ளைக்காரர் சுட்டனர் என்று சிறுவயதிலே அவர் கேள்விப்பட்டிருப்பார். நமது காலத்தைப்போல, கவர்னர் ஜெனரலின் கனிவு- கோகலேயின் தெளிவு-முதல் சீர்திருத்தத்தின், அழகு-என்பன போன்றவைகளை அல்ல, அவர் சிறுவராக இருக்கும்போது கேட்டது. நாம், அடிமைத்தனத்திலே நாடு அதிகமாக ஊறிப்போன காலத்திலே பிறந்தோம்: அவர் ஆங்கிலேய ஆட்சியை ஆயுத பலத்தால் தாக்கிய சிப்பாய்க் கலகம், சிறுவர்களுக்கான சிறு கதையாகப் பேசப்பட்ட காலத்திலே பிறந்தவர். 1862-ல், சிப்பாய்க் கலகம் அடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு அவர் பிறந்தார். புயல் அடித்து ஓய்ந்தது, ஆனால் சாய்ந்துபோன மரங்களிலே சில, பாதையிலே கிடந்தன! அப்படிப்பட்ட சமயத்திலே பிறந்தவர், சிங்காரவேலர். இறுதிவரையில் அவரைப் பொறுத்தவரையிலே 1857 தான், ஏகாதிபத்யம், முதலாளித்வம், வர்ணாஸ்ரமம், மேளடீகம், இவைகளைத் தாக்கும் பேச்சுத்தான் அவருக்கு, மேடையிலே மட்டுமல்ல, வீட்டில்! பேச்சியிலேமட்டுமல்ல, பார்வையிலே அப்படித்தான்.

மிதவாத மணிகள் மயிலையில் பல ! தேசியக் கனவான்களும் உண்டு. சீமான்கள் உண்டு! சிங்காரவேலர், வழுக்கியிருந்தால், இதிலே எதில் வேண்டுமானாலும் தங்கிவிட்டிருக்கலாம். சட்டம் படித்தார், வக்கில் ஆனார். ஆனால் எதற்கு? அன்னிய ஆட்சிக்காரன் சட்டம் தொகுப்பது, அதை நாம் படித்து வாதாடுவது, என்பது அடிமைத்தனத்தின் சின்னம், என்று கூறி, அந்த வக்கீல் அங்கியை நெருப்பிட்டுக் கொழுத்தினார், கோர்ட்டை ஏற மறுத்து, மக்கள் மன்றத்திலே, வழக்கை எடுத்துரைத்தார் திறமையுடன். அவருக்கு ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்ய பொழிகளும் தெரியும்.

இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுவுடைமை சம்பந்தமாகவும் அதிகம் படித்துப் புரிந்துகொண்டு, அந்த அறிவைக்கொண்டு மற்றவர்களுக்கும் அவை புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன் வரிசையில் முதலிடம் அவருக்கே அளித்தாக வேண்டும்.

ஓயாத படிப்பு! உள்ளத்திலே வேதனை தரும் சகல பிரச்சனைகளுக்கும், அவர் காரண காரியம் தேடுவதிலேயே மிகக் கவலை எடுத்துக்கொண்டு உழைத்தார். நுனிப்புல் மேய்வது அவருக்குப் பிடிக்காது, பிரச்சனைகளைப் பூசி மெழுகினால் ஆத்திரப் படுவார்! வீண் ஆரவாரத்தால் மக்களை மயக்கும் இயக்கங்களைக் கண்டிப்பார். கடலோரத்திலே, கடைசியில் தானொருவனே உலாவுவதானாலூம் கொள்கையின் தோழமை ஒன்று இருந்தால் போதும் என்று கருதினார். ஏறக்குறைய, கடைசிக் காலத்தில் அவர் தனி மனிதர் போலவே நின்றார் அந்த முதியவர், எவ்வளவு உரமான, புரட்சிகரமான, கருத்துகளைத் தாங்கிக்கொண்டு இருந்தார் என்பதை எண்ணும் போதே ஆச்சரியம் உண்டாகும்.

"பேய் பூதம் பிசாசு உண்டா?" என்று கேட்டு விட வேண்டியது தான். பேய் பூதம் பிசாசு என்ற சொல் எப்போது உபயோகத்திலே கொண்டுவரப்பட்டது என்பதிலிருந்து தொடங்கி, இன்று, பிறன் உழைப்பைக்கொண்டு வாழ்பவனே உண்மையான பேய் என்கிற வரையிலே கூறிவிடுவார்; சக்தேகங்களைத் தெளியவைக்கும் முறையிலே அவருடைய மனம் ஒரு சிறந்த அகராதியாக இருந்தது. அப்படிப்பட்டவரின் மறைவு, சர்வ சாதாரணச் செய்தியாகிவிட்டது. இந்த நாட்டிலே எண்ணற்ற பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் இலட்சிய வாதிகள் பேனாப் பிடித்துக்கொண்டு இருக்கின்றனராம்!

அவர் வீரர், தீரர், என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். கிளர்ச்சிகள் அவருக்கு நிலாச் சோறு. சிறைவாசம் அவருக்குச் சகஜம். அவர் எதிர்ப்புக்கோ, எகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கோ அஞ்சினவருமல்ல. கும்பலோடு சேர்ந்து சிறைகூண்டு போனவருமல்ல. தேசியத்தின் பேரால் முதல் முதல் கைது செய்யப்பட்ட பெருமை லோக மான்ய திலகருக்கு என்பார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திலகரைத் தீண்டுவதற்கு முன்பே, தோழர் மா. சிங்காரவேலுவைத் தாக்கிவிட்டது. தேசிய ஆரவாரத்தினால் இந்த உண்மை மறைந்துபட்டது. கான்பூரில் பொது உடைமைக்காரர்கள் என்ற குற்றத்துக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்யம், தோழர் சிங்காரவேலுவையும், மௌலான அசரத் மோகானியையுந்தான் முதன் முதல் கைது செய்தது.

"தொழிலாளர்கள்" என்று ஒரு பிரிவினர் உள்ளனர் என்ற உண்மையையே, நாடு அறியும் படி முதலில் எடுத்துக் கூறிய பெருமையும் சிங்காரவேலு உடையதாகும். இங்கிலாந்திலே தொழிலாளர் கிளர்ச்சி ஆரம்பமானபோதே, இங்கு இவர், அத்தகைய கிளர்ச்சியைத் துவக்கினார்.

கூனன்போல் காணப்பட்ட இந்தியாவின் நிலையைக் கண்ட சிங்காரவேலு, முதுகெலும்பு வளைந்தால் கூனி நடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து, நாட்டுக்கு முதுகெலும்பு தொழிலாளரே என்பதை அறிந்து, அந்தத் தொழிலாளரின் விழிப்புக்காக வேலை செய்யத் தொடங்கினார். தொழிலாளர்கள், மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும், மௌடீகத்தாலும் அடக்கப்பட்டு வரும் கொடுமையைக் கண்டு கொதித்தார்.

அவருடைய அபார திறமை" தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தின் போது நன்கு விளங்கிற்று. அது சமயம் அவர் பத்து ஆண்டு தண்டனை தரப்பட்டார்.

ரயில்வே வேலை நிறுத்தம் நான்கு நாட்கள் வெற்றிகரமாக நடந்ததைக் கண்டு, ரயில்வே தலைமை அதிகாரி, ரயில்வே தொழிலாளர்களுடன் சமாதானத்திற்கு வருவதைத் தடுத்தவர்களும், தானும் தனது சகாக்களும் கடும் தண்டனை பெற்றதி லிருந்து தப்பி அப்பீல் மூலம் முயன்ற காலத்தில், அதற்கு எதிராக இருந்தவர்களும். பெசண்டு அம்மையாரும் அவர் தம் சிஷ்ய கோடிகளும் என்பதைத் தோழர் சிங்காரவேலர் நன்கு உணர்ந்தார்.ரயில்வே வேலை நிறுத்தத்தின், இக்காட்டுப் "பத்திரிகை ஜாதி' செய்த பொய்ப் பிரச்சாரம் அன்றைய ஒரு லட்சம் தொழிலாளர் வாயில் மண் போட்டது என்பதற்கும். பின் தலையை எடுக்க வேண்டிய கோடானு தொழிலாளரின் கண் விழிப்புக்குத் தடைக் கல்லாக இருந்த என்பதையும் கண்ட பின்பே, அவர் மனமாறுதல் அடைந்தார். தொழிலாளர் சமூகம் உண்மையாக நியாயம் பெறவேண்டுமானால், முதலானிகளான வெள்ளே முதலாளி, கருப்பு முதலாளி ஆகிய இவர்களின் பிடியினின்று விடுதலையாகு முன், முதலாளிகட்கும், தொழிலாளிகட்கும் உண் மையில் துரோகிகளாக உள்ள போலித் தொழிலாளர் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலையவேண்டுமென்று எண்ணினார். அவர் தொழிலாளர் இயக்கத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு வந்ததற்குக் காரணம் இதுவே யாகும்.

தோழர் சிங்காரவேலர் சிறந்த ஒத்துழை யாதார்.நல்ல வரும்படி வந்த காலத்திலும், காந்தியத்தில் நம்பிக்கை கொண்டு தனது வக்கீல்களில் சிங்காரவேவர் முதன்மையானவர். காங்கரசின் பேரால் வக்கில் வேலையை விட்டு,பின்பு, மீண்டும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்களில் சிங்காரலேயர் சேர்த்தவரல்ல. சிறந்த ஒந்துழையாதாராகவே இருந்தார். சென்னையில் பொதுமக்களின் பேரால் நடந்த பெரிய "கிளர்ச்சிகள்'" நான்கு என்ற சொல்லலாம். குளைமில் வேலை நிறுத்தம், பிரின்ஸ்-சப்-வேல்ஸ் பகிஷ்காரம், சைமன் பகிஷ்காரம், கானாட்டுக் கோமகன் பகிஷ்காரம் என்பவைகளில் தோழர் ரசிங்காரவேலர் முதல் முன்றிலும் பூரண பங்கெடுத் துக்கொண்டார். இதே காலத்தில் அமெரிக்காவில், சாக்கோ, வான்சிட்டி என்ற இரண்டுச் பொது உடைமைத் தோழர்கள், பொது உடைமை வழக்கில் சம்பந்தப்பட்டு எலக்ட்ரிக் மூலம் கொல்லப்பட்டார்கள். இச்செயலைக் கண்டிக்கச், சென்னை பீப்பில்ஸ் பார்க்கில் தோழர் சிங்காரவேலர் ஓர் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டினர். மாகாண சர்க்கார் பயந்து தனது போலீஸ் படை முழுவதையும் அனுப்பி அக்கூட்டத்தை பயமுறுத்தியது. அன்றைய கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஒத்துக்கொண்டவரும், பிரசங்கம் செய்யச் சம்மதித்தவர்களும் போலீஸ் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அஞ்சி அந்தப் பக்கமே வரவில்லை.

மனம் அலுத்த சிங்காரவேலர் தனியாகப் பீப்பில்ஸ் பார்க் பக்கம் வந்தார். தன் நண்பர்கள் யாரும் வரவில்லையே என்பதற்காகப் பயந்துவிடவில்லை. கூட்டமோ இவ்வளவு தடபுடலாகக் கூடாது என்று எண்ணி வந்த சிங்காரவேல் அங்கு கண்டதென்ன? பிரம்மாண்டமான கூட்டத்தையும், அதன் மத்தியில் ஒருவர் சமதர்மப் பாடல் பாடுவதையும், இரண்டு மூன்று இளைஞர்கள் மேடை மீது இருப்பதையும் கண்டார். தான் எதிர்பாராத சம்பவம் நடப்பதைக் கண்டு ஓர் சிறிய புன்னகையுடன் மேடையருகில் வந்து பார்ந்தார். மேடை மீது இருந்தவர்கள் தனக்குப் புதிதாய் இருந்தாலும், அன்று தான் எடுத்துக் கொண்ட வேலைக்கு தனக்கு உதவியாக இருப்பதைக் கண்டு, ஆச்சரியப்பட்டார். கூட்டமே நடக்காது என்று எண்ணியவர் சென்னைப் பொது மக்கள் இவ்வளவு போலீஸ் மீரட்டலையும் அலட்சியப்படுத்திக் கொடுமையாகக் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கத் தொழிலாளர்களிடம் அனுதாபம் காட்டி அவர்கள் கொள்கையை ஆதரிப்பதற்கு அறிகுறியாக இக்கூட்டம் கூடும்படி செய்த சென்னைப் பொதுமக்களைப் பாராட்டினார், இக்கூட்டத்தில் தான், காலஞ் சென்ற சிங்காரவேலரின் கவனம் சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திருப்பப்பட்டது. பட்டுக்கோட்டைத் தோழர் அழகர் சாமி சொன்னார். 'செருப்புத் தைக்கும் சமூகத்திலும் மீன் பிடிக்கும் சமூகத்திலும் பிறந்த இரண்டு தொழிலாளர்கள் அமெரிக்க சர்க்காரால் தண்டிக்கப்பட்டார்கள். தொழிலாளர் சமூகம் விழிக்குமுன்பு, இத்தயை சம்பவங்கள் பல நிகழவேண்டும். நமது நாட்டுத் தொழிலாளர் உலகம் கண்விழித்து இத்தாலிய மீன்பிடிக்கும், தொழிலாளியான வான்சிட்டி இறந்ததைப்போல், நமது உண்மைத் தொழிலாளர் தலைவரான சிங்காரவேலர் இந்நாட்டு வான்சிட்டியாக சர்க்காரால் தண்டிக்கப்பட்டு, அக்கூட்டத்தைக் காண அசைப்படுகிறேன் என்று. இச்சொல் ஒன்றே சிங்காரவேலரைச் சுயமரியாதைக்காரனாக்கியது.

சுயமரியாதை இயக்கம் சமதர்மம், இந்நாட்டு மக்களுக்குத் தக்கபடி எடுத்துச் சொல்லி, 'மார்க்கீசம்' என்பதன் பொருளாதார தத்துவத்தைச் சாதாரணமானவரும் உணரும்படி செய்த பெருமை நாட்டில் இருவரையே சாரும். மற்ற மற்ற மாகாண மக்கள் பொது உடைமைத் தத்துவத்தை உணர்த்திருப்பதற்கும். இம்மாகாண மக்கள் அதிலும் தொழிலாளர் இயக்கம் பொது உடைமையை உணர்ந்திருப்பதற்கும் இன்னும் ஏராளமான வித்தியாசம் உண்டு. மார்க்கீசத்தைக் கரைத்துக் குடித்து எவரும் எளிதில் உணரும்படி எழுதியும் பேசியும் வந்தவர்கள் பெரியார் இராமசாமி அவர்களும், தோழர் சிங்கார வேலருமேயாகும். தோழர் சிங்காரவேலர் சுயமரியாதை இயக்கம் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டார். அவரின் உழைப்பை எந்தச் சுயமரியாதைக்காரனும் மறக்ககாட்டான்.

எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டுமென்ற சிறந்த இலட்சியமே அவருக்கு. இது கிடைக்கவிடாமல் தடுப்பது எதுவாக இருப்பினும், அதனைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று அவர் துடித்தார்.

ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினர். அவருடைய தீவிர வாதத்தைக் கண்டு திகில் கொண்டவர்கள் அவரை நாத்திகர் என்று கூறினர்; அவர் அதனை ஏற்றுக் கொண்டார்; சென்னையில் நாத்தீகர் மாநாட்டையே நடத்தினார்; இந்தியாவிலேயே யாரும் செய்யாத காரியம் அது. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு, பழி பாவத்திற்கு அஞ்சாமல், பாமர மக்களைக் கசக்கிப் பிழியும் வர்க்கத்தை நோக்கி, அந்த மாவீரர் கேட்டார்.

'உலகில் உயிர்கள் படுந்துயரத்திற்கு யார் ஜவாப்தாரி? பாசுவைப் புலி பிடித்துத் தின்னவும், தேரையைப் பாம்பு பிடித்துத் தின்னவும் யார் கட்டளையிட்டார்? இந்தக் கொடூரக் காட்சியை விடவா வேறு உள்ளது? நோய், வறுமை, பஞ்சம், புயல், வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பளங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுனை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத் பாந்தவன் அன்பன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடிமா சமணர்களைக் கழவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்களென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ? கிறிஸ்தவரும் முஸ்லீலும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனை கோவில்கள் கட்டிடங்கள் இடிந்தன. எத்தனை நாடுகள் நகரங்கள் நாசமாயின.?"

இவ்விதமாக, எதிரி திணரும்படியான கேள்விகளைப் பச்சை பச்சையாகக் கேட்பார் மா. சிங்காரவேவர். அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருடைய இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திய போது, நாடே அதிர்ந்தது. சர்க்காரும் நடுங்கிற்று என்று கூறலாம். காசியில் சிக்கிக்கிடந்த மக்களை அவர்கள் கைபிடித்து இழுத்து மாஸ்கோவுக்கு அழைத்தனர்.