பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/53: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→மெய்ப்புப் பார்க்கப்பட்டவை: {{center|48}} |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | சரிபார்க்கப்பட்டவை |
14:12, 24 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திகழும் அவர்களுள்
திலகம் போன்றவன்
திருமா வளமன்னன்;
புகழும் அறிவும்
ஆற்றலும் வாய்ந்தவன்
பொன்னேர் குணமன்னன்.
4
சின்னஞ் சிறியவன்
என்னும் வயதினில்
திருமா வளமன்னன்
அன்னோ! இழந்தான்
பெற்றோர் அவர்தமை
அறியாப் பருவமதில்.
5
ஆளும் உரிமையை
அன்புடன் ஏற்றனன்
திருமா வளஅரசன்
கேளும் கேளும்
பங்கா ளிகள்புரி
கெடுதியை என்சொல்வேன்!
6
ஏழாம் வயதில்
சிம்மா சனமதில்
ஏறினன் இளவரசன்
ஊழால் பகைவர்கள்
சிறையினில் அவன்தனை
உடனே அடைத்தனரே.
7
செய்தி அறிந்தனர்;
சினமது கொண்டனர்
சோழப் பொதுமக்கள்.
உய்ந்திவர் போவதும்
உண்டோ எனவே
உறுமினர் பொதுமக்கள்.
8
48