சீனத்தின் குரல்/இரண்டாவது அபினிப்போர்

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாவது அபினிப்போர்

முதலில் நடந்த அபினிப் போருக்குப் பிறகு சட்ட ரீதியான எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டும் எதிரிகளின் ஆசை அடங்காதக் காரணத்தால் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1857-ம் ஆண்டு சீனர்கள் சமர்க்களம் நோக்கி வரவேண்டியிருந்தது. இரண்டாவது முறையாகப் போர் முகங்காணும் சீனவீரர்கள் போரையே நடத்தி நடத்தி ஒவ்வொருவனும் போர் வாளாக மாறிவிட்ட வெள்ளையரை எதிர்த்து நிற்க முடியாமல் இரண்டாவது முறையாகவும் தோல்வியுற்றார்கள், பல தோல்விகள் ஒரு வெற்றிக்கு வழிகோலுவதைப் போல், புதியதாக போர்த்தொழிலைத் தொடங்கியிருக்கும் சீனர்கள் இரண்டாவது முறையும் தோல்வியுற்றதை தோல்வியாகக் கருதாமல் சிறந்த அனுபவக் கோட்டையின் இரண்டாவது வழுக்குப்படியிலிருந்து கீழே சருக்கி விழுந்துவிட்டதாக எண்ணினார்கள். இந்த இரண்டாவது போரின் முடிவு சீன சாம்ராஜ்யத்தின் பிரபல தலைநகரான பீகிங் Peiking நகரம் ஆங்கிலேயர் வசமாயிற்று.