சீனத்தின் குரல்/தப்பியோடியும் விடவில்லை

விக்கிமூலம் இலிருந்து

தப்பியோடியும் விடவில்லை

தளபதிகள் செய்திருந்த முடிவுப்படி 1936 டிசம்பர் 12-ந் தேதி காலை 6 மணிக்கு, சியான் என்ற ஊரில் அவர் தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டு கலவரம் செய்தனர். வெளியே நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் தன்னைக் கைது செய்வதற்காகத்தான் என்று தெரிந்துகொண்ட சியாங்-கே-ஷேக் ஜன்னல் வழியாக கீழே குதித்து கை கால்களில் காயங்களோடு பக்கத்திலிருந்த மலையில் போய் ஒளிந்து கொண்டார். அங்கேயும் விடாமல் பின்தொடர்ந்து போய் கைது செய்துவிட்டான் சன்-மிங்-சு. ஆனால் சியாங்கை நடத்தி அழைத்துக்கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் சியாங் அவ்வளவு காயமடைந்து மயக்கமுற்றுக் கீழே விழுந்து கிடந்தார். ஆகையால் தோளிலே தூக்கிக்கொண்டு வந்து பத்திரமாக பாதுகாவலில் வைத்துவிட்டான்.