சீனத்தின் குரல்/துரோகி

விக்கிமூலம் இலிருந்து
துரோகி

தனக்குக் குடிரசுத் தலைமைப் பதவி வந்தவுடனே, முன்பு மகாராணியாருக்கும் மஞ்சு சர்க்காருக்கும் துரோகியாக இருந்ததைப் போலவே குடியரசுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகியாய்விட்டான். தன் சொந்த நலத்தைப் பெருக்குவதற்காக ஜப்பானிடம் ஏராளமான கடன் வாங்கிவிட்டான். தன்னிஷ்டம் போல் நடக்கத் தொடங்கிவிட்டான். இதனால், வெற்றிப் பாதையில் இரண்டோர் அடிகள் தள்ளாடித் தள்ளாடி அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் குடியரசுக் குழந்தை பயத்தால் திரும்பப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டித்த சன்-யாட்-சன்னுக்கு விரோதியாய் விட்டான் யுவான் - ஷி -கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சீனத்தின்_குரல்/துரோகி&oldid=1073187" இலிருந்து மீள்விக்கப்பட்டது