தமிழர் ஆடைகள்/001
முதற்பதிப்பின் முகவுரை
டாக்டர். ச. வே. சுப்பிரமணியன்
மேளாள் இயக்குநர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
தமிழரின் பண்பாட்டை விளக்குவதற்குப் பயன்படும் பல நூல்களை நிறுவனம் வெளியிட எண்ணியுள்ளது. முயன்று கொண்டிருக்கிறது. அவ்வகையில் முதல் நூலாக நிறுவனத்திலிருந்து தமிழர் நாட்டு விளையாட்டுகள் என்ற நூல் அக்டோபர் எண்பதில் வெளிவந்தது. இரண்டாவது நூலாக இந்நூல் வெளிவருகின்றது. ஆயின் இந்நிறுவனத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற ஆய்வேடு என்ற முறையில் அந்நிலையில் முதல் நூலாக வெளிவருகின்றது. இதைத் தோடாந்து தமிழரின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், தமிழர் உணவு, தமிழர் கண்ட மனம் போன்ற நூல்கள் வெளிவரவிருக்கின்றன.
இந்நூலாசிரியை டாக்டர் கே. பகவதி அவர்களின் கடுமையான முயற்சியையும் உழைப்பையும் ஆய்வைப் பகுத்தும் வகுத்தும் செய்கின்ற முறையையும் நூலின் ஒவ்வொரு பக்கமும் எடுத்தியம்புகின்றது. அதோடு ஆடை பற்றிய கலைச்சொற்கள் 1750-க்கு மேல் தொகுத்துத் தந்துள்ளமை வருகின்ற ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும். ஆடை பற்றிய பழமொழிகள், நம்பிக்கைகள், இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் இவைகளையெல்லாம் திரட்டிப் பின்னிணைப்பாகத் தந்துள்ளமை பாராட்டத்தக்க முயற்சி, திருமதி பகவதி இதுபோன்ற பல நல்ல ஆய்வு நூல்களை வருங்காலத்தில் எழுத வேண்டும். எழுதுவார் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.
இந்நூலினைச் சிறப்புற குறுகிய காலத்தில் அச்சிட்டு தந்த நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்களுக்க எங்கள் நன்றி உரித்தாகுக.
அடையாறு
சென்னை-600 020.
அன்பன்
ச. வே. சுப்பிரமணியன்