தமிழ்ப் பழமொழிகள் 1/ஏ

விக்கிமூலம் இலிருந்து

ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம்.

(ஏ ஊர்-எந்த ஊர், தெலுங்கு.)

ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே.

(கெட்டவனே.)

ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள். 5540

ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம்.

ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல்.

ஏகாதசிக்கு மா இடித்தாற் போல.

ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை.

ஏகாதசி பாஞ்சோத்; துவாதசி அச்சா ஹை. 5545

ஏகாதசி மரணம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டானாம்.

ஏகாதசி மரணம், துவாதசி தகனம்.

ஏகாதசி மரணம் முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிறதா?

ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை.

ஏகாதசி விரதம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா? 5550

ஏகாசி வீட்டில் சிவராத்திரி நுழைந்தாற் போல.

ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற் போல.

ஏகாக்ஷி லோக நாசினி.

ஏகோதிஷ்டக் காரனுக்குச் சபிண்டிக்காரன் சாட்சி.

எச்சிலும் பேச்சிலும் வல்லவனே. 5555

ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு.

ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை.

ஏட்டிக்குப் போட்டி, ஏணிக்குக் கோணி.

ஏட்டில் அடங்காது, எண்ணத் தொலையாது.

ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா? 5560

(தித்திக்குமா?)

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

(கூட்டுக்கு.)

ஏட்டுச் சுரைக்காயோ, வீட்டுச் சுரைக்காயோ?

ஏடா கூடக்காரனுக்கு இடம் எங்கே என்றால் இருக்கிறவன் தலைமேலே என்பான்.

(வழி எங்கே? போகிறவன் தலைமேலே.)

ஏடாகூடம் எப்படி என்றால் போகின்றவன் தலையில் பொத்தென்று அடித்தான்.

ஏடாகூடம் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன். 5565

ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்.

(அறியான், பெறான்.)

ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம்.

ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழி கண்ணி.

ஏண்டா கருடா சுகமா என்றால், இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான் என்றான்.

ஏண்டா தம்பி குருநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்? 5570

ஏண்டா தென்ன மரத்தில் ஏறுகிறாய் என்றால் கன்றுக்குட்டிக்குப் புல்பிடுங்க என்றான்; தென்ன மரத்தில் ஏதடா புல் என்றால் அதுதானே கீழே இறங்கி வருகிறேன் என்றான்.

ஏண்டா பட்டப்பகலில் திருடினாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.

ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் புளிய மரத்தில் புல் பறிக்க என்கிறான்.

ஏண்டி கிழவி மஞ்சள் குளிக்கிறாய்? பழைய நினைப்படா பேரா.

ஏணிக் கழிக்குக் கோணற் கழி வெட்டலாமா? 5575

ஏணிக்குக் கோணி.

ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும்.

ஏணிக் கொம்புக்கு எதிர்க் கொம்பு போடலாமா?

ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா?

(ஏணிக் கழிக்கு.)

ஏணி, தோணி, வாத்தியார், நாரத்தங்காய். 5580

(அண்ணாவி.)

ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா?

ஏணி வைத்தாலும் எட்டாது.

ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா?

ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல்.

(தேவாரம்.)

எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை. 5585

ஏதுக்கு வீணும் சாணும்.

ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா.

ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?

ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.

ஏந்தாழை என்றால் கோந்தாழை. 5590

ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம்.

ஏமாந்த சோணகிரி.

ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை.

ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.

(மேய்த்தால்.)

ஏர் அற்றவன் இரப்பாளி. 5595

ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும்.

ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது.

ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.

ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.

(மச்சான் முறை.)

ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா? 5600

ஏர் ஓட்டுவதிலும் எரு விடுதல் நன்று.

ஏர் நடந்தால் பேர் நடக்கும்.

ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்; வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம்.

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

ஏர் பிடித்தவன் முன்னேறினால் செங்கோல் பிடித்தவன் செழிப்பான். 5605

ஏர் பூட்டுவதற்குள் பிராணன் போய்விடும்.

ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.

ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா?

ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான்.

(பிட்டம்.)

ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை. 5610

ஏரிக்குப் பயந்து கால் கழுவாமல் ஓடினானாம்.

ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம்.

ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது.

(ஏரி-திமில்.)

ஏரி நிரம்பினால் இடைக்கரை பொசியும்.

ஏரி நிறைந்தால் கரை கசியும். 5615

(நீர் கசியும்.)

ஏரி நீரைக் கட்டுவது அரிது; உடைப்பது எளிது.

(கட்டுதல், உடைத்தல்.)

ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.

ஏரி மடை என்றால் நோரி மழை.

ஏரி மிதந்தால் குடை அணை மிறியாது.

(மதியாது.)

ஏரி மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனாள். 5620

(போனால் ஏரியா நாறும்.)

ஏரியோடு பகை செய்து ஸ்நானம் செய்யாதிருப்பதா?

(ஏரியை மதியாது.)

ஏரியோ தண்ணீர், சூரிய தேவா.

ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ?

ஏரை இழந்தார் பேரை இழந்தார்.

(இழந்தாயோ, இழந்தாய்.)

ஏலவே தொலைந்தது எங்களை தொட்ட கர்மம். 5625

ஏலாத நாய்க்கு வால் டேங்குவது போல.

ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும்.

(பணம், எங்கே போனாலும்.)

ஏலேலம்! ஏலேலம்! எருமைச் சாணி காய்கிறது.

ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.

ஏவா மக்கள் மூவா மருந்து. 5630

ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; இயற்றுகிறவனுக்குத் தலைச்சுமை.

(செய்கிறவனுக்கு.)

ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை.

ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள்.

(உள்ளே வைத்தாலும், தாழறை வழியே சோரம் போவாள்.)

ஏழாம் பொருத்தம்.

ஏழாயிரம் பொன் பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில், குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம். 5635

ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம்.

ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல்.

எழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை.

ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார்.

ஏழு ஊருக்கு ஒரு கொல்லன். 5640

(குறுந்தொகை.)

ஏழு ஊருக்கு ஒரு தட்டான்.

ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும்.

ஏழுமலை தாண்டலாம்; ஓர் ஆறு தாண்ட முடியாது.

ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும்.

ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். 5645

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்.

ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ?

ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே.

ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

ஏழை என்றால் மோழையும் பாயும். 5650

ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை.

ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம்.

ஏழைக்குத் தெய்வமே துணை.

(தண்டலையார் சதகம்.)

ஏழைக்கும் மோழைக்கும் இடுதேள் பட்டேனே. 5655

ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை.

(காடுகாள்-துர்க்கை.)

ஏழைக்கு வாழை.

ஏழைக் குறும்பு.

ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது.

ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே. 5660

ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது.

ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல்.

ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.

ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை. 5665

(இறைவனே.)

ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா?

(வேண்டும்.)

ஏழை பேச்சு அம்பலம் பாயுமா?

ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.

ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல.

ஏழை வீட்டில் சனீசுவரன் புகுந்த மாதிரி. 5670

ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல்.

ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.

ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி?

ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.

(துர்ப்பிணி, துர்க்குணி.)

ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம். 5675

ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.

(அழகேலம்.)

ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி.

ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.

ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை.

ஏற்பது இகழ்ச்சி. 5680

ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும்.

ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம்.

ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம்.

ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும்.

ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை. 5685

ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.

(வேண்டும்.)

ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும்.

(சாணானாய்ப் பிறக்க வேண்டும்.)

ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

(நொண்டிக்குக் கோபம்.)

ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம். 5690

ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம்.

(முடியாத, எண்ணாயிரங்காய்.)

ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை.

ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய்.

ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா!

(வாங்கினாற் போல்.)

ஏறாத வார்த்தை வசமாகுமா? 5695

ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும்.

ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல.

ஏறா மேடும் பாயாத் தண்ணீரும்.

ஏறாலக்கமாய்ப் பேசுகிறாய்.

ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும். 5700

ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.

ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி.

ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா?

ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல்.

(செட்டி நாட்டு வழக்கு.)

ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம். 5705

(மொண்டிக்கு.)

ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம்.

(இறங்கினால் குற்றம்.)

ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.

ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம்.

ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்?

(பிட்டத்தை.)

ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது. 5710

ஏறும் தேமல், இறங்கும் தேமல்.

ஏறும் தேமல், இறங்கும் படர் தாமரை, கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.

ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல.

(ஏறா மடைக்கு.)

ஏறு மாறாய்ப் பேசுகிறதா?

ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். 5715

ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது.

ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல?

ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை.

ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?

ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான். 5720

ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.

ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான்.

ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம்.

ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா?

ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம். 5725

ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம்.

ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே.

ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி.

ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே?

ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல். 5730

(சோர்ந்திருக்கிறாய்.)

ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம்.

ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை.

ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.

(எடுத்துப் பார்ப்பாரும்.)

ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை.

(பார்ப்பாரும்.)

ஏன் கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால எல்லாரும் சுகந்தான். 5735

(தண்டலையார் சதகம்.)

ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம்.

ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன்.

ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன்.

ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல்.

ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம். 5740

(கண்டாளாம்; பிடித்தாளாம்.)

ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி,

ஏனோ தானோ எவனோ செத்தான்.

ஏனோ தானோ என்றிருத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_1/ஏ&oldid=1157202" இலிருந்து மீள்விக்கப்பட்டது