பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு வகைகள் - 25, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." என்று கூறியுள்ளதை நாம் நன்கு அறிவோம். தவிர, உலகியலில் இன்னார்தான் போர்க்காரணமாகப் பிரிய வேண்டும், இன்னார் தான் பொருளீட்டுவதற்குப் பிரியவேண்டும் என்ற நியதியும் என்றும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்று எல்லாச் சாதி யினரும் எல்லாத் தொழில்களையும் செய்து வருவது கண்கூடு. பார்ப்பனர் போரில் ஈடுபடுகின்றனர்; அரசாங்க அலுவல் பார்க் கின்றனர்; வாணிகம் செய்கின்றனர்; உழவுத் தொழிலும் புரிகின்றனர். அங்ங்ணமே வேளாளர் மறையோதுகின்றனர்; அரசாங்க அலுவல்களில் அமர்கின்றனர்; வாணிகத்திலும் ஈடுபடு கின்றனர். இங்ங்ணமே ஏனைய சாதியினரும் எல்லாவிதத் தொழில் களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் தொழில் செய்யும் பொழுது, செய்யும் தொழில் காரணமாக அந்தந்தச் சாதியா கின்றனர் என்று கோடலே பொருந்தும்; பண்டும் இம்முறையே வழக்கிலிருந்திருக்க வேண்டும். நான் ஆசிரியத் தொழிலிலிருப் பதால், யான் பார்ப்பனன். என் மைந்தர்களில் ஒருவன் வாணிகம் செய்தால் அவன் வணிகன்; இன்னொருவன் உழவுத் தொழிலில் ஈடுபட்டால் அவன் வேளாளன்." ஓதல், பகை, தூது என்று பிரிவுக்கு நிமித்தம் கூறும் தொல்காப்பியர், அவற்றுள், t ஒதலும் தூதும் உயர்ந்தோர் மேன. " என்று கூறும்பொழுது உயர்ந்தோர்’ என்று பொதுப்படையாக இருப்பது சிந்தித்தற் குரியது. பிறப்பினால் உயர்வு உண்டு என்ற கொள்கையில் அழுந்திய உரையாசிரியர்கள் உயர்ந்தோர். என்பதற்குத் தத்தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தனர். இளம்பூரணர் நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர், அரசர் என்றும், நச்சினார்க்கினியர் அந்தணர் முதலிய மூவர் என்றும் பொருளுரைத்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மனப் பான்மைக் கேற்றவாறு ஒவ்வோர் அளவுகோல் கொண்டனர். இங்ஙனம் உரையாசிரியர்கள் சாதிப் பிரிவை யொட்டி உயர்ந் தோர் என்று கூறியிருப்பது இக்காலத்திற்குச் சிறிதும் ஏற்காது; 14. குறள்-972. - - 15. இன்றும் ஆந்திரத்தில் ஆசிரியத் தொழிலுள்ளவர்கள் 'அய்யவாரு” (அய்யர்) என்று வழங்கப்பெறுவதை அறிக. - 16. அகத்திணை-28.