பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் - 319 தவாஅ வியரோ நட்பே அவள்வயின் அறாஅ லியரோ துதே ... ... ... முழங்கிரு முந்நீர்த் திறையினும் பலவே' (முயங்கல்-தழுவுதல் என்றும்-எஞ்ஞான்றும்; தவாஅலியர்கெடாது நிலை பெறுவதாக; அவள் வயின்-அவளிடத்து: அறாஅலியர்-ஒழியாது செல்வதாக) என்று கூறி விடாது முயன்று வெற்றியுற எண்ணுவதைக் காண் கின்றோம். இத்தகையவனின் முயற்சியை, நன்றல் காலையும் நட்பிற் கோடார் சென்று வழிபடுஉம் திரியில் சூழ்ச்சி' என்று அகநானூறு போற்றுவதையும் காண்கின்றோம். உயர் குடிப்பிறப்பினனாகிய தலைவன் கடமையின்பொருட் டன்றித் தம் உற்றாரைப் பிரிந்துறைய நினையான்; அன்புடைய நெஞ்சினனாதலின் இன்சொற்களையே கூறும் இயல்பினன் இத்தகைய அகநானூற்றுத் தலைவன், குடிநன் குடையன் கூடுநர்ப் பிரியலன் கெடுநா மொழியலன் அன்பினன்" குடியர்குடிப் பிறப்பு: நா கெடு-நாவில்ை கெட் வற்றை) . என்று புகழப்பெறுதலைக் காணலாம். தலைவனின் இயல்புகளைத் தலைவிக்குத் தோழி கூற்றாகக் கபிலர் கூறுவதைக் காண்க. ... ... ... ... ... ... ... . . . فاة 60مع புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட்டு) ஒன்றறிந் தான்போல் ' நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க .. வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்' |புரப்பான்-காப்பான் மதுகை-வலிமை; வல்லார்-மெய்ப் பொருள் கூறுவதில் வல்லவர்கள் நல்லார்-நன்மக்கள்: புன்கண்-வறுமை; தணிக்க-போக்க: வண்மை-கொடை) 25. ബ്ലേ.-338, 26. டிெ-113, 27. ഞു.-352 28. குறிஞ்சிக்கலி-11.