பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 அகத்திணைக் கொள்கைகள் கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் குறிஞ்சிப் பாட்டு என்ற ஒர் அழகான பாட்டினை இயற்றி அவனுத்குத் தமிழின் நீர்மையினை உணர்த்தினார். இவனே பின்னர், தமிழில் கவிபாடும் அளவுக்குத் தமிழ்ப் புலமை பெற்றுத் திகழ்ந்தான்." அறம் உரைக்க வந்த திருவள்ளுவனாரும் காமத்துப் பாலைக் களவு, கற்பு எனப் பகுத்து அவற்றின் விகற்பங்களைத் தமிழ் இலக்கணத்துடன் பொருந்தக் கூறிச் செல்வதிலிருந்தும் அகப்பொருளின் பெருமையை நன்கு உணரலாம். உயர்ந்த அன்பு நிலையை வெளிப்படுத்துவதற்கு அகத்துறை களைவிட உயர்ந்த இடம் பிறிதினின்று. எனவே, முழுமுதற் கடவுளிடத்துப் பேரன்பு செலுத்தி ஆடிப்பாடி அகம் குழைந்து நெக்குருகின அடியார்களும் கூடி அக்கடவுளையும் தம்மையும் தலைவன் தலைவர்களாகக் கொண்டு இவ்வகத் துறைகள் வாயி லாகவே பக்தி என்னும் பெருவெள்ளத்தில் இழிந்து மூழ்கிக் களிப் பாராயினர். கடவுளிடத்துக் செலுத்தும் காமப் பகுதியைக் புறத் திணைக்குரியதாக ஆசிரியர்கள் இலக்கணம் வகுத்திருப்பினும், அதன் பொருட் கூறுகள் யாவும் அகத்திணைத் தொடர்புடையன வாகவே அமைந்துள்ளன. இந்த அருமைப் பெருமைகளைத் தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலிய பக்திப் பனுவல்களால் அறியலாம். எனவே, சிற்றின்பத்திற்கு மட்டுமின்றிப் பேரின்பக் கடலில் இறங்குவதற்கும் இந்த அகத்துறைகள் உரிமைபூண்டுத் திகழ்வனவாகும். 18. குறுந். 184. ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் என்பா னால் இயற்றப்பெற்றது. பிரமதத்தனும் பிரகதத்தனும் ஒருவனே என்று ஊகித்தற்கு இடம் உண்டு,