பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (பேராசிரியர் வ. சுப. மாணிக்கம், துணைவேந்தர், மதுரைகாமராசர் பல்கலைக் கழகம், மதுரை-625 021) நண்பர் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் துறை பல வல்ல ஒரு பெருந்தமிழ்ப் பேராசிரியர் என்பதனை நாடறியும். ஐம்பூத நுட்பவியலை அழகான தமிழில் ஆற்றலுடன் எழுத முடியும் எனத் தமிழின் மொழியாண்மையைக் காட்டி மூன்று பரிசு பெற்றவர். பாடநூலாகப் பழைய அறிவியலை எழுதித் தமிழைப் பிற்படுத்தாமல் புத்தம் புதிய அறிவியற் பிடிப்புக்களை வளருந் தமிழில் வரையாது எழுதிவரும் ஆக்க எழுத்தாளர்; இத்தனிச் சிறப்பு இத்தமிழ்ப் பேராசிரியர்க்கே உண்டு. எழுதுந்துறை எதுவாயினும் அறிவியல் உறவாடுவதை இவர்தம் கைவண்ணத்திற் காணலாம். அகத்திணைக் கொள்கைகள்' என்ற இவ்வகல நூலிலும் அறிவியல் உண்மைகள் படிந்துள. கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் பிறப்பினைக் கூறுங்கால் 'அறிவியலாசிரியர் தாமே தம் செய்திறனால் கருவியொன்று சமைத்துச் சில அறிவியல் மெய்ம்மைகளை விளக்குவதுபோல் ஆசிரியப் பெருந்தகையான கபிலரும் தாமே பாவியற்றி அதனைக் கொண்டே அகத்திணை நெறியின் உயிரனைய கருத்தினை அவ்வரசனுக்குத் (ஆரியவரசன்பிரகத்தனுக்குத்தெளிவுறுத்தினர்' என்று உவமங்காட்டுவர். கண்ணும் கண்ணும் சேர்வதால் காமத் தி பிறப்பதைச் சிக்கிமுக்கிக் கற்கள் இரண்டும் சேர்ந்து தீ உண்டா கும் அறிவியல் கருத்துக்கு ஒப்பிடுவர். ஆண்-பெண் பாலியல்களை எடுத்துத் தந்து அகத்திணைமைகளை விளக்கும் இடங்கள் இந் நூலில் பலவுள. இவையெல்லாம் ஆசிரியரின் அறிவியற் பயிற்சியை யும் பயன்கோளையும் காட்டுவதோடு கழகச் சான்றோர்களின் இலக்கியப் படைப்புக்கள் இன்றைய அறிவியலுக்கும் வாழ்வுக்கும் பொருந்துவன என்தும் மெய்ப்பிக்கின்றன.