ಚಿ அகத்திணைக் கொள்கைகள்
(மறையோர் தேஎம்-அந்தணரது வேதம்: డ్డు
திருமணம்: துறையமை நல்யாழ்த்துணையோர்
கந்திருவர்.) . என்ற தொல்காப்பியனாரின் நூற்பா மேற்கூறிய கருத்துகளைத் தெளிவாகப் புலனாக்கும். சிந்தாமணி ஆசிரியரும் இது தமிழ் வழக்கே என்பதை, -
இலைபுறங் கண்ட கண்ணி
யீன்றமிழ் இயற்கை இன்பம்" -
தேவர் பண்ணிய தீந்தொடை இன்சுவை *. மேவர் தென்றமிழ் மெய்ப்பொருள் ஆதலின்" వాలి. கூற்றுகளால் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஒருவனும் ஒருத்தியுமாக எதிர்ப்பட்டார் இருவர் புனலொடு
புல் சாய்ந்தாற்போலத் தம் தலைமைக் குணங்களை இழந்து, மெய்யுறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்டே, கந்தர்வ மணம் என்பது. இங்ஙனம் கூடினோர் தம் வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்வர் ೯7ಸೆ) உறுதி இல்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியால், கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற நிலையும் இவ்வகை மணத்திற்கு உண்டு. இன்று உலகியல் வழக்கில் இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் காணத்தான் செய்கின்றோம். ஆனால், தமிழர் கூறும் களவொழுக்கமோ, இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினால், "தான், அவள் என்ற வேற்றுமையின்றி, இருவரும் ஒருவரா யொழுகும் உள்ளப் புணர்ச்சியாகும். இதனை இறையனார் களவியல், -
அதுவே,
தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்” என்று குறிப்பிடும். இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரை யொருவர் இன்றியமையாதொழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலைபெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்வுற்ற பின்னர், ஒருவரை யொருவர் பிரிவின்றியொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து وسميت ميره ريري هي T
12. டிெ பதுமையர்-163 16. இறை. கள-2,
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/62
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
