பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்தலைப்பாடு . 65 யாதலின் ஒரு சிலபாடல்கள்தாம் யாக்கப் பெற்றிருத்தல் கூடும். அவற்றுள் இம் மூன்று பாடல்களைத் தவிர வேறு சிலவும் இருந்து மறைந்து போயிருத்தல் கூடும் தொகை நூல்கள் தோன்றிய காலத்திலேயே அவை அழிந்துபட்டிருத்தல் கூடும் என்றும் கருத லாம். தொல்காப்பியர் இடந்தலைப்பாட்டுக் கிளவிகளாகக் கூறும் எட்டுக் கிளவிகளில் கூறுதலுறுதல் என்ற கிளவியால் புணர்ச்சி நடைபெறுவதாகத் தெரிகின்றது. இது மேலும் ஆராயத் தககது. -